பக்கம் எண் :

திருமுறை]8. கோயில்59


ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
   அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (8)
 

88.

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
   பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
   கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
   பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (9)
 

89.

உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
   ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
   இருட்பிழம் பறஎறி கோயில்
 

முதலியோரது     உலகங்களை,       போர்த்த-பெற்றுள்ள.     தம்
பெருமை-அவற்றது    பெருமைகள்   பலவும்,     ‘சிறுமையாய்ப்புக்கு
ஒடுங்கும்  புணர்ப்பு’  என்க.  ‘புணர்ப்பு’  என்றது. ஆற்றலை, ‘எல்லா
உலகங்களின் பெருமைகளூம் தனது ஆற்றலுள்ளே மிகச்  சிறியனவாய்
ஒடுங்கத்  தக்க  பெரியோன்’ என்றவாறு. அமரித்து-போரிட்டு ; ‘நான்
முன்னே,  நான்  முன்னே  என்று  ஒருவருக்கு  முன்னே  ஒருவராய்
முற்பட்டு  வந்து’ என்பதாம். ‘கடல்போல இடுகின்ற தீர்த்த நீர்’ என்க.
திரை-அலைவீசுகின்ற.     ‘அமரரும்,     பிறரும்    தூய    நீரால்
திருச்சிற்றம்பலத்தில்  இறைவனை வழிபடுகின்றனர்’ என்றபடி.  ‘‘பிறர்’’
என்றதும், வானுலகத்தவரை.

88.     மொழுப்பு-முடி. ‘அன்னை அளித்தாங்கு’ என   இயையும்.
பொழில்   அகம்   குடைந்து-சோலைகளின்   உள்ளே    மலர்களில்
மகரந்தத்தைக்  கிண்டி. தென்ன தேன்-‘தென்ன’என்கின்ற  இசையாகிய
தேன். ‘தென்ன புலியூர்’ என்று இயைத்து, ‘அழகினை யுடைய புலியூர்’
என்றும் உரைப்ப.

89.     உம்பர்      நாடு-தேவர்          உலகம்.     இம்பர்
விளங்கியாங்கு-இவ்வுலகத்தில் வந்து விளங்கினாற்போல. எங்கும்