பக்கம் எண் :

64கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


96. 
 

நீலமே கண்டம்; பவளமே திருவாய் ;
   நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் ; நிறையஆ னந்தம்
   பொழியுமே   திருமுகம்   ;  ஒருவர் 
கோலமே  அச்சோ  !அழகிதே யென்று
   குழைவரே கண்டவர் ; உண்ட
தாலமே; ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (6)
 

97. 
 

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
   திறத்தவர் புறத்திருந் தலச,
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
   மற்றோரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
   புரியவும் வல்லரே; எல்லே
அக்கடா வாகில்; அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (7)
 

96.  நீலம்-நீலரத்தினம், நித்திலம்-முத்து.    நிரைத்து-வரிசைப்பட
வைக்கப்பட்டு.    முறுவல்-நகைப்பு.    ‘‘திருமுகம்’’    என்றதன்பின்,
‘இவ்வாறாகலின்’   என்னும்   சொல்லெச்சம்  வருவிக்க.  ‘‘கோலமே,
அழகிதே’’  என்ற  ஏகாரங்களில்  முன்னது  அசைநிலை  : பின்னது
தேற்றம்.    அச்சோ,    வியப்பிடைச்    சொல்,    குழைவர்-மனம்
உருகுவார்கள்.

97.   திக்கு அடா நினைந்து-பலதிசைகளிலும் அடுத்து நினைந்து ;
என்றது,   (இறைவனை)   ‘எங்கும்   தேடி   அலைந்து’   என்றபடி.
இடிந்து-துயருற்று   புறத்து  இருந்து-ஆட்கொள்ளப்படாமல்  இருந்து,
அலச-மெலிய.  மைக்  கடா-கரிய  நிறம் பொருந்திய கடா ; எருமைக்
கடா  இஃது  உணர்வின்மை  பற்றி  வந்த  உவமை.  ஆள்-அடிமை,
‘‘ஆளாக’’  என  ஆக்கம் விருவிக்க. பொய்-நிலையாமை. ‘‘பொய்க்கு’’
என்ற     நான்கனுருபை,    இரண்டனுருபாகத்    திரிக்க.    அடா
வண்ணம்-பொருந்தாதபடி. ‘‘புரியவும்’’ என்ற உம்மை. சிறப்பு. கல்லில்
நார் உரித்ததுபோன்ற செயலாதல் பற்றி, ‘வல்லரே’ என்றார், ‘‘எல்லே’’
என்பது ‘என்னே’ என்பது போன்றதோர் இடைச்சொல் ; இஃது இங்கு
இறைவரது கருணையை வியந்த வியப்பின்கண் வந்தது. ‘அக்கடா’