பக்கம் எண் :

100கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.               (6)
 

150. 
 

சொன்னவில் முறைநான் காரணம் உணராச்
   சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
   கருணையிற் பெரியதொன் றுளதே ?
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
   விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.             (7,8,9)
 

பார்த்திருந்து   - தோன்றுதலை    எதிர்நோக்கியிருந்து. அலச-வருந்த,
‘அவர்களிடம்   செல்லாமல்   என்பால்   வந்து  என்  மனத்தில்  நீ
குடிகொண்ட  இந்நிலைக்கு  நான்  என்ன   தகுதியுடையேன் ! எனது
தொண்டுதான்  என்ன தகுதியுடையது’ என்றபடி.   அம் மனம்-அழகிய
மனம் ; அடியவர் மனம். குளிர்நாள்- மகிழ்வதற்கு   அமைந்த நாளில்.
சிவபெருமானது    விழாக்களில்    அவன்    பலிக்கு    (பிச்சைக்கு)
எழுந்தருளும்   விழாவும்   ஒன்றாதல்  அறிக.  அரிவையரது   குழல்
அவிழ்தல்.     இறைவனைக்        காதலித்தமையாலாம்.     குழல்
சுரும்பு-கூந்தலில்  உள்ள  வண்டுகள்  ‘‘பொம்மென’’  என்றது. ஒலிக்
குறிப்பு.

150.     ‘சொல் முறை நவில்’ என மாற்றி, சொற்களை,  ஒலிக்கும்
முறைப்படி  சொல்கின்ற’  என  உரைக்க. உணராச்சூழல்-எட்டலாகாத
இடம்.   ‘‘கல்  நவில்’’  என்றதில்  நவில்.  உவம  உருபு.  கண்ணில்
அகப்பட்டமை    பற்றி,    அதனை     வலையாக   உருவகித்தார்.
பெரியது-பெரியதொரு   கருணை.   உளதே-உண்டோ.  ஆரணத்துள்
அகப்படாமை   அவை  சொல்வடிவாதலாலும்,   கண்வலைப்பட்டமை
அதனைச்  செலுத்துகின்ற  உணர்வின்  தூய்மையாலும்   என்க. மின்
நவில்-ஒளிமிகுந்த.   வாய்தல்-வாயில்   மாடம்,   கோபுரம்.   பொன்
நவில்-பொன்   மிகுந்த.   புரிசை-மதில்.  ‘வாய்தல்’  மாடம்,  புரிசை
இவைகளையுடைய வீதி’ என்க.