283. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ‘‘உற்றாள்’ என்றதை முற்றெச்சமாகக் கொண்டு உரைக்க. உய-உய்ய. இதன்பின், ‘கொள்ள’ என ஒரு சொல் வருவிக்க. செயல் உற்று ஆர்-வேலைப்பாடு அமைந்து நிறைந்த. இவண்-இப்பொழுது. மயல்-பித்து. ‘இவட்கு அருள்’ என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க. 284. ‘ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன் என்றாற்போலத் தில்லையானது பேச்சினை நீ பேசினால் நான் உய்வேன்; (இல்லாவிடில் உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று வேண்டுவாள்’ என்க. வண்டு ஆர்-வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற) ; ‘நிறைந்த’ என்றலுமாம். ‘நான் முகனைச் சிரம் சேதித்தீர்’ என மாற்றுக. சேதித்தீர்-அறுத்தவரே. ‘சிரம் சேதித்தீர்’ என்றது. ‘ஒறுத்தீர்’ என்னும் பொருட்டாய். ‘நான்முகனை’ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ‘தில்லைக்கண் நின்று வாதித்தீர்’ என்க. வாதித்தீர்-வருந்தப் பண்ணினீர். ‘இது தகுமோ’ என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது. 285. ‘‘பகைத்தார் புரம்.. .. .. .. கால்வளைத்தீர்’‘ என்பதை முதலிற் கொள்க. கொடி-பூங்கொடிபோன்றவள். கோமளச்சாதி-அழகிய செண்பகப் பூப்போன்றவள். கொம்பு-பூங்கொம்பு போன்றவள். ‘கொம்பினை’ என இங்கும் இரண்டாவது |