பக்கம் எண் :

186சேதிராயர் திருவிசைப்பா[ஒன்பதாந்


286.

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.                  (8)
 

287.

அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
கொன்று காலனைக் கோள்இழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்று மாகிலள் உம்பொருட்டே.                   (9)
 


விரிக்க.     இளம்  பிடி-இளமையான பெண்யானை     போன்றவள்.
இவையெல்லாம்    தலைவியையே   குறித்து   வந்த   பலபெயர்கள்.
இடிய-அழியும்படி.   செஞ்சிலை-நிமிர்ந்து   நின்ற   வில்லை.   கால்
வளைத்தீர்-இரண்டு    காலும்   அணுக   வருமாறு   வளைத்தவரே.
‘பகைத்தார்   புரம்  இடியச்  செய்தது  பொருந்தும்;  காதலித்தாளை
இடியச் செய்தல் பொருந்துமோ’ என்பது குறிப்பு. ‘நீர் செய்த மூச்சறவு
என்று  முடியும்’  என  மாற்றுக. மூச்சறவு-இறந்துபாடு; இஃது அதற்கு
ஏதுவாய  வருத்தத்தைக்  குறித்து  நின்றது.  என்று முடியும்-எந்நாள்
நீங்கும்.  ‘நீங்குதல் இன்றி. இறந்துபாட்டினைச் செய்தேவிடும்போலும்’
என்பது குறிப்பெச்சம்.

286.     அறவன்   -   அற     வடிவினன்.   மறவன்-வேடன்.
‘‘அறவன்,மறவன்’’ என்பன, ‘தன்னை அடைந்தாரை  இடுக்கண் நீக்கிக்
காப்பவன்’  என்னும்  குறிப்புணர்த்தி நின்றன.  வாதை-துன்பம். பிறை
குலாம்  நுதல்-பிறை  விளங்குவது  போலும்  நெற்றியையுடைய. பெய்
வளை-இடப்பட்ட  வளையினை  உடையவள்.  ‘இவள்  எப்பொழுதும்
உம்மையே  நினைந்து  முறையிடுகின்றாள்;   இவளது  வருத்தத்தைப்
போக்கீர்’ என்பது கருத்து.

287.     அருக்கன்-சூரியன்.   சூரியனைப் பல்  இறுத்தது தக்கன்
வேள்வியில்.  ‘‘இறுத்து,  கொன்று’’  என்ற  எச்சங்கள் எண்ணின்கண்
வந்தன.      கோள்-உயிரைக்       கொள்ளுதல்;         கொலை.
இழைத்தீர்-செய்தவரே.    எனும்-என்று    சொல்லுவாள்.     ‘இவள்
உம்பொருட்டு   ஒன்றும்   ஆகிலள்’  என்க.  உம்பொருட்டு-உம்மை
அடையவேண்டி.    ஒன்றும்    ஆகிலள்-ஒருபொருளும்    ஆகாது
அழிந்தொழிகின்றாள். ‘இவளைக்