41


என   இராசராசேச்சரத்    திருவிசைப்பாவில்    கூறப்பட்டிருப்பதால்,
அகில்புகை   கமழும்   மாளிகையும்,   மகளிர்  யாழ்பயில்   இடமும்
உடையனவாய்   மதிலும்  கிடங்கும்   சூழப்  பொலிவுடன்  இருந்தது. இத்  தஞ்சை    மாநகரம்.      இராசராசேச்சுரக்     கல்வெட்டிலும்
இராசேந்திரசோழன்   திருமதில்   என்று    திருமதிலின்   பெயர்
கூறப்பட்டிருப்பதையும்  நோக்குக.  (S.  I.  I.  Vol.  II  Page  393)
கருந்திட்டைக்குடிக்குத்  தென்பால்  ஓடும்  ஆற்றுக்கு வடவாறு என்று
பெயர்.    அவ்வாற்றின்மூலம்    கிடங்குகளுக்கு    நீர்   பாய்ந்தது.
முதலைகளும் அக்கிடங்கில் விடப்பட்டிருந்தன.

இராசராசனைப் பற்றிய சிறு குறிப்பு:

பிற்காலச்   சோழமன்னர்களின்  பெருமைக்கும்  புகழுக்கும்  ஒரு
நிலைக்களமாய்     இருப்பது     தஞ்சை     இராசராசேச்சரமாகும்.
மேல்நாட்டாரும்    இதனைக்கண்டு    விம்மிதம்    அடைகின்றனர்.
இத்துணைச்  சிறப்பினையுடைய  இதனைக் கட்டுவித்தவன் கி.பி.1985
முதல்  கி.பி.  1014  வரை  சோழமண்டலத்தை  ஈடும்  எடுப்புமின்றி
ஆண்ட முதலாம் இராசராசசோழன் ஆவன்.

இவன்     சுந்தரசோழன்  என  வழங்கும்  இரண்டாம்  பராந்தக
சோழனது   இளைய  மகன்.  இவன்  பிறந்தது  ஐப்பசிச்   சதயநாள்.
இவனது     இயற்பெயர்    அருண்மொழித்தேவன்,    பட்டப்பெயர்
இராசகேசரி,     இராசராசன்    என்னும்    பெயர்    தில்லைவாழ்
அந்தணர்களால்    இவனுக்குக்    கொடுக்கப்பட்டது   (கொங்குதேச
இராசாக்கள் என்னும் நூலில் காண்க).

இவனது       முதற்பெருந்தேவியார்       ஓலோகமாதேவியார்,
இம்மாதேவியார்   அன்றி   சோழமாதேவி,  திரைலோக்கியமகாதேவி,
பஞ்சவன்மாதேவி,    அபிமானவல்லி,    இலாடமாதேவி,   என்னும்
தேவியர்களும்  இருந்தனர்.  இவனுக்கு  இராசேந்திரன் என்னும் ஒரு
மகனும், மாதேவடிகள், குந்தவை II. அருமொழி


1. Professor    Kielhorn has examined a number of dates of the  king  with  astronomical  details  and  has come to the conclusion  that  his  accession took place between the 25th June  and  25th  July  985 A.D. ’’ (Rao Sahib  H.Krishna Sastri B.A, S. I. I. Vol II Part V, Introduction Page 2)