சந்திரமல்லியரான கங்கமாதேவியார் என்னும் மூவர் பெண் மக்களும் இருந்தனர். முதலாம் குந்தைவையார் இவனது திருத்தமக்கையார் (The venerable elder sister) ஆவர். இவன் காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தருளினான். வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழமண்டலம், இரட்டபாடி ஏழரை இலக்கம், பழந்தீவுபன்னீராயிரம் இவைகளை வென்றான். மேலைச்சளுக்கிய அரசனாகிய சத்தியாசிரயனைத் தோற்றோடச் செய்தான். உறையூரில் போர் நிகழ்த்தினான். இவ்வெற்றிகளுக்குக் காரணம் இவன் நல்ல படைகளை வைத்திருந்ததோடு அப்படைகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்தமையே யாகும். இவனது படைகளைப்பற்றிப் பின்வருமாறு கல்வெட்டுக்களினால் அறியக்கிடக்கின்றன. அவை, |