‘‘மறைகளும் அமரர்கூட்டமு மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி முறை முறை முறையிட்டோர் வரியாயை.’’ -திருமாளிகைத் தேவர். ‘‘பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க் கெளிய தோர் பவளமால் வரையை.’’ -சேந்தனார். ‘‘கேழலும் புள்ளுமாகி நின்றிருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்.’’ -கருவூர்த் தேவர். ‘‘பரவிக்கிடந்து அயனும்மாலும் பணிந்தேத்த.’’ -பூந்துருத்திநம்பிகாடநம்பி. ‘‘வாளா மாலயன் வீழ்ந்து காண்பரிய மாண்பு.’’ -வேணாட்டிகள். ‘‘வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி யெய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார் எழில் மறையவற் றாலே.’’ -திருவாலியமுதனார். ‘‘அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் இருவரு மறிவுடையாரின் மிக்கா ரேத்து கின்றா ரின்ன மெங்கள் கூத்தை’’ -புருடோத்தமநம்பி. ‘‘புரந்தரன் மாலயன் பூசலிட் டோல மிட்டு இன்னம் புகலரிதா யிரந்திரந் தழைப்ப என்னுயிராண்ட கோ.’’ -சேந்தனார் பல்லாண்டு. ஆணவம் அடையாத வெற்றியை இவ்வடியார்கள் அன்பால் அடைந்து இப்படிப் பெருமை பொங்கப் பேசுகிறார்கள். சிந்திப்பரிய தெய்வப் பதி: அளக்கலாகா அருளுடையாளன் எழுந்தருளிய திருத்தலங்கள் பலவானாலும் சிந்திப்பரிய தெய்வப்பதி என்று திருவாலியமுதனார் திருவாக்கால் சிறப்பிக்கப்படும் பதி சபாபதி ஆடும் |