9


தஞ்சாவூர் என்னும் பெயர்க்காரணம்:

ஆனந்தவல்லி   அம்பிகை, தஞ்சகாசுரன் என்பவனை வதம் செய்த
காலத்து,  அவ்வசுரன்  அம்பிகையை   நோக்கி  ‘‘இத்தலம் அடியேன்
பெயரால்  வழங்கவேண்டும்’’  என்று வரம் பெற்றமையால்,  தஞ்சாபுரி
என்று வழங்கப்பெற்றது என்பர்.

இவ்வூர்க்குள்ள வேறு  பெயர்  : குபேரன்  பூசித்துச் சிலகாலம்
இருந்தமையின் இவ்வூர் அளகை என்னும் பெயர் பெற்றது.

இறைவரின்  திருப்பெயர்: தஞ்சைப்   பெருவுடையார்   என்பது இலக்கியத்தில்கண்ட பெயர். வடமொழியில் பிரகதீசுவரர் என்பர்.

இறைவியாரின் திருப்பெயர்: பெரியநாயகி என்பது வடமொழியில்
பிருகந்நாயகி என்பர்.

பெருமை:

கருவூர்த்தேவர்   அருளிச்செய்த திருவிசைப்பாப் பெற்றது. “பாரிற்,
கருவிசையை  நீத்த  கருவூரர் போற்றும், திருவிசைப்பாவுகந்த தேவே’’
என்பர் திரு. சிவக்கொழுந்து தேசிகர் (தஞ்சைப் பெருவுடையார் உலா.
300-301)

தஞ்சைவிடங்கர்:

சோழ    மன்னர்கள்,  திருவாரூர்த்   தியாகராச    மூர்த்தியிடம்
பற்றுடையவர்கள்.  ஆதலால்  அவர்கள்  இந்த இராச ராசேச்சரத்தில்
உள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியாகராச மூர்த்தியாகவே எண்ணி,
அம்மூர்த்திக்குத்  திருவாரூரில்  நடைபெறும்  சிறப்புக்களை எல்லாம்
இத்தலத்தில்  இவருக்கும்  நடத்திவந்தனர்.  தஞ்சைவிடங்கர் என்பது
இவரின்  திருப்பெயர். “  சீரார்  கருணைத்   தியாகரே _ ஏராரோங்
காரரே’’ என்பது (தஞ்சைப் பெருவுடையார் உலா (96 - 97)

இத்தலத்திற்குரிய ஆகமம்; மகுடாகமம்.

தலத்தைப்பற்றிய நூற்கள்:

தஞ்சைப் பெருவுடையார்  உலா. இது கும்பகோணத்திற்கு அருகில் திருக்கொட்டையூரில் இருந்த முத்தமிழ்ப் புலமைசான்ற