பக்கம் எண் :

மூலமும் உரையும்105



போல என்க. இறுதி-ஊழி முடிவு. ஆறு-ஈண்டு ஆறு உறுப்புக்கள். அவையாவன: மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதி, நிருத்தம், சோதிடம் என்பன. இனி இறைவனுக்குக் கூறுங்கால் மறுமை தந்துதவும் எனக் கண்ணழித்து மறுமைப் பயனைத் தந்துதவுகின்ற எனப் பொருள் கொள்க. இனி, கல்வியும் சுத்தமாயையின் பரிணாமமாதலின் அசுத்த மாயையாலாய உலகங்களின் அழிவின்கண் அழியாது நிற்பது கருதி அங்ஙனம் கூறினார் எனினுமாம். இருமை-பெருமை. இனி, ஒருமையிற் கற்ற கல்வி சாவின்கண் அழியாமல் எழுமையினும் தொடர்தல்பற்றி இறுதியிற் சகியாதிருத்தலின் என்றார் எனினுமாம்.

20: அருள்..................................ஆகியும்

     (இ-ள்) அருள்வழி காட்டலின்-திருவருள் நெறியை விளக்குதலாலே; இருவிழி ஆகியும்-இரண்டு கண்களே ஆகியும்; என்க.

     (வி-ம்.) அருள்வழி-அருளை மேற்கொண்டு செல்லும் வீட்டு நெறி. புறக்கண்கள் நல்ல நெறியைக் காட்டுதலும் உணர்க. இனி,

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
 புண்ணுடையோர் கல்லா தவர்”              (குறள். 393)

எனவரும் திருக்குறளையும் நினைக.

21-22: கொள்ளுநர்....................................ஆகியும்

     (இ-ள்) கொள்ளுநர் கொள்ளக் குறையாதாகலின்-ஏற்றுக் கொள்ளுவோர் எவ்வலவு ஏற்றுக் கொள்ளினும் குறைதல் இல்லாமையின்; நிறைஉளம் ந்ங்காது உறைஅருள் ஆகியும்-தான் நிறைந்த நெஞ்சினின்றும் ஒருகாலத்தும் ந்ங்காமல் உறைகின்ற அருளை ஒத்தும் என்க.

     (வி-ம்.) கொள்ளுநர் கல்விக்குக் கூறுங்கால் நல்மாணாக்கரையும் அருளுக்குக் கொள்ளுங்கால் உயிர்களையும் கொள்க. இனி அருளுக்குச் சமயக் கணக்கர் எனினுமாம். என்னை! ஒன்றனோடொன்று முரண்படுகின்ற சமயங்கள் எல்லாம் அருளைக் கொள்ளுதலின் என்க.

23-24: அவை..............................மாக்கள்

     (இ-ள்) அவை முதலாகி-அவையின்கண் முதன்மையுடையதாய்; இருவினை கெடுக்கும்-இருள்சேர் இருவினைகளையும் அழிக்கும்; புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள்-அறப்பண்புடைய கல்வியைத் தம்முள்ளத்தே நிகழ்விக்கின்ற சான்றோர் என்க.

     (வி-ம்.) அவை-நல்லவை. நல்லவையின் இயல்பினை,