பக்கம் எண் :

மூலமும் உரையும்177



பட்டமுகில் மழை பொழிந்தாற்போலே மதம் பொழியும் களிறுகள் பிளிறும் கூடல் என்க.

40-41: நிறைய...............பெரும

     (இ-ள்) பெரும-எம்பெருமானே! நிறைய பேசாக் குறையினர் போலவும்-முழுதும் வாழ்த்தாமையால் உண்டாய குற்றத்தினை யுடையார் போலவும்; கல்லா மனனினும்-மெய்ந்நூல்களைக் கல்லாத கயவர் நெஞ்சம் போலவும்; செலுதி-சூள் பொய்த்த குற்றமுடையையாகவும் ஒருவழிப் படாமலும் பாலையிலே செல்லாநின்றனை என்க.

     (வி-ம்.) நிறையப் பேசுதலாவது முழுதும் வாழ்த்துதல். கல்லா மனம் ஒருவழிப்படாததுபோல நீயும் காதலாகிய ஒரு நெறியிற் படாமல் என விரித்தோதுக.

4-6: களவு...................அரற்ற

     (இ-ள்) களவு அலர் தூற்ற-களா மலரைச் சொரியா நிற்பவும், தளவு கொடி நடுங்க-முல்லைக்கொடி அசையவும்; வேயுளம் பட்டு பூவை கண் கறுக்க-மலரும் பருவமெய்துக் காயா தம்மிடமெலாம் கறாநிற்பவும், வண்டு-வண்டு; தண்டா மயல்கொடு-குறையாத விருப்பத்தைக் கொண்டு; பரந்து அரற்ற-யாண்டும் பரவி முரலாநிற்பவும் என்க.

     (வி-ம்.) களவு-களா; குறியதன்கீழ் ஆக்குறுகி உகரம் ஏற்று நின்று களவு என்றாயிற்று. தளவு-முல்லை. பூவை வேயுள் பட்டு என மாறுக. வேயுள்-மலர்ச்சி. வேய்; பகுதி உள்: விகுதி. எனவே மலர்தல் உண்டாகி என்க. வேயுளம் என்புழி அம்: இசைநிறை. பூவை-காயா. கன்-இடம். தண்டா-குறையாத. இனி இவை எம்பெருமானே, நின்னுடைய பிரிவினை கருதிக் களவு அலர் தூற்றவும் தளவு அஞ்சி நடுங்கவும் பூவை வெகுண்டு கண் சிவப்பவும் வண்டு மயங்கி அழாநிற்பவும் எனவும் வேறு பொருள் தோற்றுமாறுமுணர்க.

7-11: காலம்..........................உகுப்ப

     (இ-ள்) தோன்றி காலங் கருதி கை குலைப்ப-செங்காந்தள் இப்பருவத்தை நினைந்து கை விரல்கள் போல் மலர்க்குலைகளைத் தோன்றாநிற்பவும்; கொன்றை கண் தும்பு ஊரும் பசப்பு நிழல் தன்னை-கொன்றைகள் பிரிந்த மகளிர் கண்ணிடத்தே அத்துன்பங் காரணமாகப் பாய்கின்ற பசலையினது ஒளியை, திருமலர் எடுத்துக்காட்ட-தமது அழகிய மலரால் பிறர்க்கு எடுத்துக்கூறாநிற்பவும்; கோடல் இறை நில்லாதென்பன நிலைக்க-வெண்காந்தள்கள் அம்மகளிர் கையின்கண் அணிந்த வலையல் இனி அவர்தம் கையினிடத்தே தங்கியிராமல் இங்ஙனமே கழன்று வீழும் என்று அறிவுறுத்துவனபோல; வளைந்த கல்.-12