பக்கம் எண் :

18கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



அதன் உரையாசிரியர், “கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை” என உரைவகுத்தலானும் உணர்க. நேரி-சோழநாட்டின் கண்ணதாகிய ஒரு மலை. தடையாது-தடைசெய்யாமல். நேரிமலை வானுற வளர்ந்து விண்ணில் வானவர் செல்லும் வழியைத் தடைசெய்து நின்றது ஆதலின் அகத்தியர் அதனை நிலத்தில் அழுத்தி வழியுண்டாக்கினர் என்பது கருத்து. இனி முருகப்பெருமான் குறுமுனிக்கு மறைமொழி செவியறிவுறுத்தியதனை,

“இன்னபல் வரமு நல்கென் றிரந்தனன் முனிவர் கோமான்
அன்னனணம் வரங்க ணல்கி யறுமுகக் கடவு ளன்னான்
தன்னைநற் றமிழின் பாடை தனக்குமுன் குரவ னாக்கிப்
பொன்னிவர் கோயி லுள்ளாற் போதந்து ஞானங் கூறும்”

(தணிகை. அகத்தியர், 148) எனவரும் செய்யுள் முதலியவற்றால் உணர்க. குறுமுனி-அகத்திய முனிவங் குறுமுனிதேற நெடுமறை விரித்தோய் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

50 - 51: ஆறு..............................பொலிந்தோய்

     (இ-ள்) ஆறுதிரு எழுத்தும் கூறும் நிலைகண்டு-நினக்குரிய ‘சரவணபவ’ என்னும் ஆறு திருவெழுத்துக்களையும் ஓதுதற்குரிய முறைமையினை யுணர்ந்து ஓதி; நின் தாள் புகழுநர்-நின்னுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடுகின்ற நின் அன்பர்களுடைய; கண்ணுள் பொலிந்தோய்-அகக் கண்ணினூடே அருளுருக் கொண்டு பொலிவு பெற்றுத் திகழ்ந்தோய் என்க.

     (வி-ம்.) ஆறுதிருவெழுத்து-சரவணபவ என்பன; ‘குமராயநம’ என்பனவுமாம். ;முருகாய நம’ என்பனவுமாம். கூறும்நிலை-ஓதும் முறைமை. கண்டு-அறிந்து. புகழுநர்-புகழ்ந்து பாடுவோர். கண்-அகக்கண்

“அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்”

(-திருமுருகு. பின்சேர்க்கை வெண்பா 6)

எனவரும் வெண்பாவையும் ஈண்டு நினைக.

52 - 55: மணிக்................................ஆதலின்

     (இ-ள்) மணிக்கால் அறிஞர் பெருங்குடித்தோன்றி-மணிகளின் பிறப்பிடத்தை அறியும் மணிவணிகரது பெரிய குடியின்கண் மூங்கைப் பிள்ளையாய்ப் பிறந்து; இறையோன் பொருட்கு-இறையனார் அருளிச் செய்த அகப்பொருள் இலக்கணமாகிய பொருள் நூலுக்கு; பரணர் முதல் கேட்ப-பரணர்