பக்கம் எண் :

மூலமும் உரையும்185



6-8: பலதலை.......................வாவிக்குள்

     (இ-ள்) பலதலை வைத்து முடியாது-ஓரிடத்திற் சென்றமையாது பல இடங்களினும் சென்று; எங்கு பாயும் முகம் வைத்த-எவ்விடங்களிலும் பரவும் எண்ணிறந்த பாயும் முகங்களைக் கொண்ட; கங்கைக்காலும்-கங்கையாகிய வாய்க்கால்களையும்; கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்-தன்பாற் கொண்ட குளிர்ச்சி மிகுந்த வானமாகிய குளத்திற்குள் என்க.

     (வி-ம்.) முகிலாகிய இலைகளையும் மீனாகிய மீன்களையும் செம்முகில் வெண்முகில் ஆகிய பழைய புதிய நுரைகளையும் கங்கையாகிய வாய்க்காலையும் உடைய வானமாகிய குளத்தினுள் என்க.

9-12: முயல்......................தாமரையே

     (இ-ள்) முயல் எனும் வண்டு உண-முயலாகிய வண்டு பருகும்படி; அமுத நறவு ஒழுக்கி-அமுதமாகிய தேனைச் சிந்தி; தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து-தெய்வ மகளிர்களின் மகிழ்ச்சியால் மலர்ந்த முகங்களைப் பழித்து; பாண்டில் குறையா வெண்மையின் மலர்ந்த மதித்தாமரையே-வட்டம் குறைதலில்லாத வெண்மை நிறத்தோடு இருந்த திங்கள்மண்டிலமாகிய வெண்டாமரையே! என்க.

     (வி-ம்.) மலர்முகம்: வினைத்தொகை; மலர்ந்த முகம் என்க. பாண்டில்-வட்டம். மதித்தாமரை: பண்புத்தொகை.

12-13: மயங்கிய.........................ஒன்றுள

     (இ-ள்) மயங்கிய ஒருவேன்-வருத்தமுடைய ஒருத்தியாகிய யான்; நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள-நின்னிடத்தே வினவும் அன்பு மொழி ஒன்று உளது அஃதியாதெனில் என்க.

     (வி-ம்.) ஒருவேன்-ஒருத்தியாகிய யாங் அளிமொழி-அன்புமொழி. ஒன்றுள: பன்மை ஒருமை மயக்கம். இனி உளது என்பது ஈறுகெட்டதெனினுமாம்.

14-16: மீன்.......................பொதும்பரில்

     (இ-ள்) திரை இடைமீன் பாய்ந்து மறிக்க-அலகளிடத்தே மீன்கள் பாய்ந்து தடுக்க; வளை மயங்கி சுல் வயிறு உளைந்து கிடந்து முரலும்-சங்கு மயக்கமுற்றுச் சூலுடைய வயிறு நொந்து கிடந்து முழங்கும்; புன்னையம் பொதும்பரில்-புன்னைமரச் சோலையிலே என்க.