|
காரத்திற்கு (3. 141-142)
அடியார்க்குநல்லார் கூறும் உரையிலும் காண்க.
31-34:
மூன்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,இரட்ட
(இ-ள்) மூன்று புறத்து
ஒன்றில்-முப்புறங்களுள் வைத்து ஒருபுறத்தினுள்; அரசு உடைவாணன் எழுகடல் கிளர்ந்த திரள்களி
அடங்க-அரசாட்சி செய்யும் வாணாசுரன் ஏழுகடலின்றும் எழுந்த பெருகிய திரண்ட ஆறாவாரங்கள்
அட்ஙகிப்போடும்படி; முகம்வேறு இசைக்கும்-தனது ஐந்து முகங்களும் வெவ்வேறு ஓசையாக முழங்கும்;
குடமுழவு-குடமுழாவென்னும் தோற்கருவியினை; மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடு இரட்ட-மேருமலை
ஆயிரங்கிளைகள் வி்ட்டாற்போன்ற தன்னுடைய ஆயிரங் கைகளாலும் முழுக்காநிற்கவும் என்க.
(வி-ம்.) வாணன் கடவொலி
அடங்கும்படி குடமுழாவினை முழக்க என்றவாறு. வாணன்-வாணாசுரன். கலி-ஆரவாரம் குடமுழா-ஐந்து
முகங்களையுடைய ஒரு தோற்கருவி. இரட்டுதல்-முழக்குதல் வாணாசுரனுடைய தோள்களுக்கு மேருமலையின்
கிளைகள் உவமை. இஃது இல்பொருளுவமை
35-39:
புள்,,,,,,,,,,,,,உருக,
(இ-ள்) புள்கால்
தும்புறு-பறவைக்கால் போன்ற காலினையுடைய துன்புறு முனிவரும்; மனக்கந்திருவர்-எப்பொழுதும்
ஆணும்பெண்ணுமாய் மணந்திருக்கும் கந்தருவர்களும்; நால்மறை பயனாம் ஏழ் இசை அமைத்து-நான்கு
வேதத்தின் பயனாகிய ஏழு பண்களையும் முறைப்படி அமைத்துக்கொண்டு சருக்கரைக்குன்றில்
தேன்மழை நான்றென-சருக்கரையாகிய மலையின்மேல் தேனாகிய மழைபெய்தாற்போலே; ஏழு
முனிவர்கள் தாழும் மாதவர்-அத்திரி முதலிய ஏழு முனிவர்களும் வணங்கும் தவப் பெருமையுடைய
சிறந்த தவத்தினை யுடையோரெல்லாம்; அன்பினர் உள்ளமொடு என்புகரைந்து உருக-அன்புடையோராய்
உள்ளமும் என்பும் கரைந்து உருகி நிற்ப என்க.
(வி-ம்.) ஏழிசை-குரல்,
துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளறி, தாரம் என்பன. நாலுதல்-வீழ்தல். ஏழுமுனிவர்-அத்திரி,
ஆங்கீரசன், கௌதமன், கமதக்கிநி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் என்னுமிவர்.
40-44
விரல்............காட்டாது
(இ-ள்)
விரல் நான்கு அணி அமைத்த-நான்கு விரலும் அணியாக அமைக்கப்பட்ட; குரல் வீங்காது-மிடறு
|