பக்கம் எண் :

190கல்லாடம்[செய்யுள்21]



எழுந்தொலியாத கீழிசையும்; ஒருபுறம் ஒட்டல்-ஒருபுறம் ஒட்டலும்; நெட்டுயி்ர்ப்பு எறிதல் எறிந்து நின்று இரட்டல்-நெட்டுயி்ர்ப் பெறிந்தாற்போல எறிந்து நின்று இரட்டலும; ஓசை இழைத்தல்-ஓசை இழைத்தலும்; கழிபோக்கு என்னப் பேசுறு குற்றம்-கழிபோக்கும் என்று சொல்லப்பட்ட இக்குற்றங்களையும்; அசைவொடு மாற்றி-சோம்பலையும் ஒருசேர விலக்கி என்க.

     (வி-ம்.) நாசிப்பாட்டு-ஒரு தானத்தே பாட ஒரு தானத்தே நழுவுவது. தானம்-நெஞ்சு முதலியன. காகுளி-பேய் கத்தினாற்போற் பாடுவது. ெவெடிகுரல் வெள்ளை-வெடித்த குரலாகிய நிறமில்லா வெள்ளோசை. நிறம்-

“மாத்திரைக ளொன்பானுந் தானங்க ளெட்டானு
 மேத்துங் கிாயையொன் றிரைந்துங்-கோத்துப்
 பதியயயன்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின்
 மதியோக ளைந்துநிற மாம்”

என்பதனானறிக. கீழிசை-நிறமுந்தானமுங்குறையும் தட்டை இசை ஒருபுறமோட்டல்-பாடு நிறத்தை யொதுக்கிப் பாடுதல். நெ்டுயி்ாப் பெறித வெறிந்துநின் றிரட்டல்-ஒருபு பண்ணைப்பாட வேறொரு பண்ணிலே வில்ங்கி நின்னறிரட்ல், ஓசையிழைத்தல்-காகங் கத்தினாற் போற் பாடுவது. கழிபோக்கு-ஓரோசையான தன்மை நீங்கிப் பல வோசையாய் வருதல், அசைவு-மடி.

”பெருங்குரல் கட்டை நழுவல் விலங்க
 லொருக்கி யொதுக்கம் புரைத்தல்-விருப்பிலாக்
 காகுளி காக சுரமென்னு மிவ்வெட்டு
 மாகாவெனச் சொன்னா ராய்ந்து”

என்றா ரிசைமரபுடையார். இதனோடு,

“வெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன
எள்ளிய வெழாலின் குற்ற மெறிந்துநின் றிரட்ட லெல்லை
தள்ளிய கழிபோக் சோசை யிழைத்தனெட் டுயி்ர்ப்புத் தள்ளித்
துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவும் தீர்ந்தே”
(திருவிளைாயடற். விறகு. 30.)

எனவரும் பாவினையும் ஒப்பு நோக்கு.

50-54: வண்டின்.....................விதியொடு

     (இ-ம்.) வண்டின் தாரியும்-வண்டின் முரற்சியும்; கஞ்சநாதமும்-கஞ்சக்கருவியின் ஒலியும்; வலம்புரி சத்தமும்-வலம்புரிச்சங்கின் முழக்கமும்; சிரல்-மீன்கொத்திக் குருவியும்; வான் நிலையும்-வானம் பாடியும் என்னும் இவை வானத்தே நிற்கும் நிலையும்; கழை இலை வீழ்வதும்-மூங்கிலின் இலை விழுகின்ற