பக்கம் எண் :

மூலமும் உரையும்191



வீழ்ச்சியும்; அருவி ஓசையும்-அருவி விழுங்கால் எழும் ஒலியும், முழவின் முழக்கம்-குடழாவின் முழக்கமும்; வெருகின் புணர்ச்சியும்-பூனையின் புணர்ச்சிப்பொழுதில் எழும் ஓசையும்; என்று இன்னும் இசைப்பப் பன்னிய விதியொடு-என்றும் மேலும் பாடுதற்கு வகுத்துக்கூறிய ஓசை முதலிய சிறந்த விதிகளோடே என்க.

     (வி-ம்.) தாரி-முரற்சி. கஞ்சம்-கஞ்சக்கருவி, சிரல்-மீன் கொத்திக்குருவி, வாள்: ஆகுபெயர். வானம்பாடி. இனிச், சிரல் வானிடத்தே நிற்கும் நிலையும் எனினுமாம். வெருகு-பூனை, இசைப்பப்பன்னிய-பாடற்குக்கூறிய. விதி-முறை, உத்தமமான இசை-குயிலோசையும் வண்டினாதமும் வலம்புரிச் சத்தமுமென்க.

“துய்யமொழி மென்குயிலுஞ் சோலைவரி வண்டினமும்
 வைய முழங்கும் வலம்புரியுங்-கைவைத்துத்
 தும்புருவு நாரதரும் பாடியமூ வோசையென
 நம்புநீர் நால்வேதத் துள்”

என்றா ரிசைமரபுடையவர். பாடுந்தொழிற் கிரியையாவன:-

“கிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா
 முச்சிமலை நீர் விழுக்கா டொண்பருந்து-பச்சைநிற
 வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை
 யேயுங்கா லோசை யியம்பு”

என்பதனா னறிக. இசையுந் தொழிலும் பகுத்தறியக் கிடத்தலினுய்த்துணர் நிரைநிரை. இன்னுமென்றதனால் வானம்பாடி பருந்து முதலியன கொள்க. வெருகின் புண்ாச்சி: அன்மொழித்தொகை, உறுமுதலைக் குறித்தலி்னின். பன்னுதல் பன்னென வினைமாத்திரையாய் நின்றது. இயலுதல்-பொருந்துதல்.

இதனோடு

“எழுதுசித் திரம்போன் மன்னி யிழுமெனு மருவி யோதை
 முழவொலி கஞ்ச நாதம் வலம்புரி முரலு மோசை
 கொழுதிசை வண்டின் றாரி யெனவிசைக் குணனும் வேரல்
 விழுமிலை சிரன்மீன் மேல்வீழ் வீழ்ச்சிபோற் பாடற் பண்பும்”
                          (திருவிளையாடற். விறகு, 31.)

எனவரும் பாவினையும் ஒப்புநோக்குக..

55-60: மந்தரம்...............பெருமான்

     (இ-ள்) மந்தரம் மத்திமை தாரம் என்று இவை மூன்றின்-படுத்தல், சமன், எடுத்தல் என்னும் இம்மூன்று இடங்களில் அமைத்து; துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்-துள்ளலும் தூங்கலும் தெளிவுடைத்தாய் மெலிதலும் ஆகிய இவ்வோசை விகற்பங்களோடே; கூடிய கானம்-பொருந்திய இசைப்பாட்டினைப்பாடி; அன்பொடு பரவ-அன்போடே வாழ்த்தா