பக்கம் எண் :

20கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம், இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்’ என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப்பலகை ஏறியிருந்தது ஆராய்வுழி, எல்லோருந் தாந்தாம் உரைத்த உரையே நல்லதென்று சில நாளெல்லாஞ் சென்றன.

     “ செல்ல, ‘நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது; நாம் அரசனுழைச் சென்று, நமக்கோர் காரணிகணைத் தரல் வேண்டும் என்று, கொண்டு போந்து, அவனாற் பொருளெனப் பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக் காண்டும்’ என்று எல்லோரும் ஒருப்பட்டு, அரசனுழைச் சென்றார், அரசனும் எதிர் சென்று, ‘என்னை, நூற்றுக்குப் பொருள் தரல் வேண்டும்?’ என, ‘போமின், நுமக்கோர் காரணிகனை நான் எங்ஙனம் நாடுவேன்! நீயிர் நாற்பத்தொன்பதின்மார் ஆயிற்று, நுமக்கு நிகராவார் ஒருவர் இன்மையின் அன்றே’ என்று அரசன் சொல்லப், போந்து, கன்மாப் பலகை ஏறியிருந்து, ‘அரசனுன் இது சொல்லினான், யாம் காரணிகளைப் பெறுமாறு என்னைகொல்’ என்று சிந்திப்புழி, சூத்திரஞ் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே, அவனையே காரணிகளையுந் தரல் வேண்டும் எனச் சென்று வரங்கிடத்தும் என்று வரங்கிடப்ப இடையாமத்து, ‘இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளையுளன்; அவனை அன்னனென்று இகழாது கொண்டு போந்து, ஆசனத்தின்மேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்; அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினால் தோன்றினான்’ என முக்கால் இசைத்த குரை எல்லோர்க்கும் உடன்பாடாயிற்று; ஆக, எழுந்திருந்து தேவர்குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச் சங்கமெலாஞ்சென்று, இவ்வார்த்தையெல்லாஞ் சொல்லி, ‘ஐயனாவான் உருத்திரசன்மனைத் தரல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டுபோந்து, வெஇயாது, உடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்து அணிந்து, கன்மாப்பலகை ஏற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைப்ப, எல்லாரும் முறையே பொருளுரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிள நாகனார் உரைத்தவிடத்து ஒரோவிடத்துக் கண்ணீர் வார்த்து, மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்த்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான் இருப்ப, ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு! என்றார்.

     “அதனால், உப்பூரிகுடிக்கிழார் மகனாவான் உருத்திரசன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டர்ா என்க” எனவரும் இறையனார் களவியலுரை யானும் உணர்க, பரணர் முதலிய சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மாரும் என்க, உயர்தனிச் செம்மொழி என்பது பற்றிப் பெருந்தமிழ் என்றார் பாய வென்பதன் ஈறுகுறைந்து பாய் என நின்றது, பார்-உலகு: ஆகுபெயர், புலவனும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு,