பக்கம் எண் :

மூலமும் உரையும்201



     (வி-ம்.) தேனொடு என உருபினைத் தேனொடுங் கூட்டுக. கருங்கால் செம்மணி என்புழிச் செய்யுளின்பம் உணர்க. கருங்கால் என்றது கவணின் பக்கக் கயிறுகளை. அவை மயிரால் திரிக்கப் பட்டமையின் கருங்கால் எனப்பட்டது. இறால்-தேன்கூடு. குறி-இலக்கு.

35-37: வெண்டுகில்....................கொய்தும்

     (இ-ள்) வெள்துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் அருவி ஏற்றும்-வெள்ளைத்துகில் போல அசைந்து பொன்னை வரன்றிக் கொண்டு வீழுகின்ற அருவி நீரை மெய்யின்கண் ஏற்று ஆடுவதனாலும்; முழை மலை கூஉயும்-முழையினையுடைய மலைக்கெதிர் நின்று எதிரொலி உண்டாகும்படி கூவுதலானும்; பெருஞ்சுனை விழித்த நீலம் கொய்தும்-பெரிய சுனையினிடத்தே மலர்ந்துள்ள நீல மலர்களைக் கொய்வதனாலும் என்க.

     (வி-ம்.) துகில்நுடங்கு என்புழி உவம உருபு தொக்கது. வெண்டுகில் அருவிக்கும் நுடங்குடல் அதன் வீழ்ச்சிக்கும் தொழிலுக்கும் பண்பும் பற்றி வந்த உவமைகள். முழை-குகை. மலைக்கெதிர் கூவுதல் எதிரொலி கேட்டு இன்புறுதற் பொருட்டு. இனி மலை முழையருகே நின்று கூவுங்கால் அம்முழையினின்றும் எதிரொலி எழும் என்பதனை,

பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை
பிறங்கால் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியாள்
வந்த நெறியு மறந்தேன் சிரந்தவர்
எஎயோஓவென் றேலா அவ்விளி
அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துச்
செ;ல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை
மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடந்தை
வாழ்த்துவப்பான் குன்றின் வகை;”        (பரி. 19; 58-66)

எனவரும் பரிபாடலிலும் காண்க. விளித்த நீலம் என உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருண்மேல் வுனை புணர்ந்தமையால் இது சமாதி என்னும் அணி. நீலம்: ஆகுபெயர்.

38-39: கொடு.........................கடிந்தும்

     (இ-ள்) கொடுமரம் பற்றி நெடு இதண் பொலிந்தும்-பழுமரத்தினைப் பற்றிக்கொண்டு நெடிய பரணின்கண் ஏறி இருந்து பொலிவுறுவதாலும்; குரல்தினை அரையும் கிளி கணம் கடிந்தும்-கதிரினையுடைய தினையிடத்தே வந்து ஆரவாரிக்கும் கிளிக் கூட்டத்தை ஓட்டுதலானும் என்க.

     (வி-ம்.) கொடுமரம்-பரணில் ஓருறுப்பு, இதனைப் பழுமரம் என்பர். கொடுமரம் நெட்டிதண் என்புழிச் செய்யுளின்ப முணர்க.