|
எனவும் வரும் பரஞ்சோதிமுனிவர்
வாக்காலும் உணர்க. தேவர்கோன் ஓங்கும்படி உருநிறுத்தி இழிச்சிய கோயில் என் இயைபு
காண்க.
11-12:
கருவி....................................பொதியத்து
(இ-ள்)
அடிக்கடி கருவிவானம் பொழியும்-திங்கள் மும்முறையாக அடிக்கடி மின்னல் முதலிய தொகுதிகலையுடைய
முகில் மழைபொழிதற்கிடனான; கூடம் சூழ்ந்த நெடுமுடி பொதியத்து-தேவகோட்டங்கள் சூழ்ந்துள்ள
நெடிய முடியினையுடைய பொதிய மலையின்கண் என்க.
(வி-ம்.)
திங்கள் மும்மாரி பொழியும் என்பார் அடிக்கடி பொழியும் என்றார். அடிக்கடி என்றது
அணித்தணித்தாக என்றவாறு. கருவி-தொகுதி. வானம்: ஆகுபெயர். கூடம்-நன்றாகச் சூழப்பட்ட
தேவகோட்டம்.
13-16:
கண்..............................காத்தும்
(இ-ள்)
கண்நுழையாது காட்சிகொளத்தோன்றிய வெறிவீ சந்தின் நிரை இடை எறிந்து-காண்போர்
கண்ணொளி தன்னகத்தே நுழையப்படாததாய்ப் புறத்தே நின்று நோக்குவார்க்குக் காட்சி
இன்பமுண்டாடக் காணப்பட்ட நறிய மலர்களையுடைய சந்தனமரங்களின் வரிசையினை இடைவெளியுண்டாகும்படி
வெட்டி வீழ்த்தி; மற்று அது வேலிகொள வளைத்து வளர் ஏனல்-பின்னரும் அச்சந்தன மரத்தினையே
வேலியாகவைத்து வளைத்துக் கட்டியதனால் அப்புனத்திலே வலராநின்ற தினையினை; நெடுங்கால்
குறுஉழி இதண்உழை காத்தும்-நெடிய கால்கலையும் குறிய இடத்தினையுமுடைய பரணிடத்து காவல்
செய்தும் என்க.
(வி-ம்.)
கண்: ஆகுபெயர். காட்சி: ஆகுபெயர். வெறி-நறுமணம். வீ-மலர். சந்து-சந்தனம். மற்றது:
சாதி ஒருமை. சந்தன மரத்தை வெட்டி அதனையே வேலியாக்கி என்பது கருத்து. ஏனல்-தினை.
நெடுங்கால் குற்றுழி என்புழிச் செய்யுளின்பமுணர்க. உழை இருந்து என ஒருசொல் வருவித்துக்கொள்க.
இதண்-பரண்.
17-20:
தேவர்...............................குடைந்தும்
(இ-ள்)
தேவர்கோமான் சிரை அரி புண்ணினுக்கு ஆற்றாது-இந்திரன் தம்முடைய சிரகுகளை அரிந்தமையாலுண்டான
புண்ணால் உண்டாகும் துன்பத்திற்கு ஆற்றாமல்; பெருமுழை வாய்விட்டுக்கலுழ்ந்து என-தமுடைய
பெரிய முழைகளாகிய வாயைத் திறந்து அழுதாற்போலே; கமம் சூல்கொள்மூ முதுகு குடியிருந்து
வன் உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும்-நிறைந்த சூலினையுடைய முகிலள் தம் முதுகிலே
|