பக்கம் எண் :

மூலமும் உரையும்259



தரவு

“ஆயிரங் கதிராழி ஒருபுறந்தோன் றகலத்தான்
மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த
மனக்கமல மலரினையும் மலர்த்துவான் தானாதல்
இனக்கமலம் உணர்த்துவன்போன் றெவ்வாயும் வாய்திறப்பக்
குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக்
கடவுளர்தம் உறங்காத கண்மலரே கரிபோக
ஆரிருளும் புலப்படுப்பான் அவனேஎன் றுலகறியப்
பாரகலத் திருள்பருகும் பருதியஞ் செல்வகேள்;

 

தாழிசை

“மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய்
வுண்டலத்திர் கடவுளரை வெவ்வேறு வழிபடுவார்
ஆங்குலகம் முழுவதும்போர்த் திருவுருவி னொன்றாக்கி
ஆங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்;
மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய்
நின்னுருவத் தொடுங்குதலால் நெடுவிசும்பிற் காணாதார்
எம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவாய்
அம்மீனை வெலிப்படுப்பாய் நீயேஎன் றறியாரால்;
தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைகள் தலைதேய்ந்து
உவாமதிய நின்னொடுவந் தொன்ராகும் என்றுணரார்
தண்மதியின் நின்னொளிபுக் கிருள்அகற்றாத் தவற்றாற்கொல்
அம்மதியம் படைத்தாயும் நீயேஎன் றறியாரால்;

 

இருசீர் நான்கு

நீராகி நிலம்படைத்தானை நெருப்பாகி நீர்பயந்தனை
ஊழியிற் காற்றெழுவினை ஒளிகாட்டி வெளிகாட்டினை

 

ஒருசீரெட்டு

கருவாயினை விடராயினை
கதியாயினை விதியாயினை
 உரிவாயினை அருவாயினை
ஒன்றாயினை பலவாயினை

 

தனிச்சொல்

எனவாங்கு,

 

சுரிதம்

விரிதிரைப் பெருங்கடல் அமிழ்தந் தன்ன
ஒருமுதற் கடவுள்நிற் பரவுதும் திருவொடு
சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித்