|
16 - 17: கல்லா................................பெருத்தன
(இ-ள்) துணைமுலை-எம்பெருமாட்டியினுடைய
கொங்கைகளிரண்டும்; கல்லாக் கயவர்க்கு-கற்றிலாத கீழ்மக்களுக்கு; அருநூல் கிளைமறை
சொல்லினர் தோம் எனப் பெருத்தன-உணர்தற்கரிய நூலாகிய கிளைகளையுடைய மறைகளின்
பொருளை அறிவுறுத்திய ஆசிரியர்பால் குற்றம் பெருத்தாற்போல பெருத்தன என்க.
(வி-ம்.) இஃதென்
சொல்லியவாறோ வெனின் கயவர்களுக்கு மெய்ந்நூல் உணர்த்துதல் பெருங்குற்றமாம் என்பது
பற்றித் தலைவியின் கொங்கையின் பெருமையை உணர்த்துதற்குக் கயவருக்கு மறைப்பொருளை
உணர்த்திய ஆசிரியன்பால் குற்றம் பெருகினாற் போலே என உவமையாக்கி உரைத்தபடியாம்.
இனி இங்ஙனமே,
| |
உசாவி
னன்ன நுண்ணிடை யுசாவினைப்
பேதைக் குரைப்போன் பிழைப்பிற் றாகிய
பொற்பமை கணங்கிற் பொம்மல் வெம்முலைப்
பட்டத் தேவியை |
(பெருங்.
5. 6. 5-8) |
எனவும்,
| |
அவாப்போ லகன்றத
னல்குற்றமேற் சான்றோர்
உசாப்போல வுண்டே மருங்குல்-உசாவினைப்
பேதைக் குறைப்பான் பிழைப்பிற் பெருகினவே
கோதைக்கொம் பன்னாள் குயம்
|
(யா-கா. ஒழிபு. 8) |
எனவும் பிற சான்றோரும்
உவமை கூறுதல் உணர்க. அருநூல்-உணர்தற்கரிய நூல் என்க. கிளை-நூலின் உட்பகுதிகள்.
18-19:
பலவுடம்பு............................துசுப்பே
(இ-ள்) துடிஎனும் நுசுப்பு-பண்டு
உடுக்கை என்று உவமிக்கப்படும் அவளது சிற்றிடை; பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்-பலவாகிய
உயிரினங்களின் உடல்களை அழிக்கின்ற சான்றோராற் பழிக்கப்பட்ட ஊன் உணவினையுடைய
கீழ் மக்கள் மேற்கொண்ட; தவம் எனத் தோய்ந்தது-தவம் அறத் தோய்ந்தாற்போலத்
தேய்ந்தது என்க.
(வி-ம்.)
ஊன் உணவினருடைய தவம் தேய்ந்தாற்போல இடைதேய்ந்தது என்றவாறு. பலவுடம்பு-மாவும் புள்ளும்
ஆகிய பலவேறு உயிரினங்களின் உடம்புகள் என்க. ஊன் உண்பாரிடத்து அருள் இல்லை யாகவே
தவமு இலதாயிற்று. இதனை,
| |
தன்னூன் பெருக்கற்குத்
தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்
|
(திருக்.
251) |
எனவும்,
|