பக்கம் எண் :

மூலமும் உரையும்291



பும் உவமை. அன்னங்கள் ஏந்திய இணர்கொள்வாய்க்குடம்பை என்க.

“சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக்
 காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன”      (சிந்தா. 65)

எனவரும் சிந்தாமணியால் அன்னங்கள் பூவாற் கூடியற்றுதல் பெற்றாம்.

21-24: எக்கர்...........................இனமும்

     (இ-ள்) எக்கர்புள்ளினம் வெண்மை இடம் மறைக்கும் சிறைவிரி தூவிச் செங்கால் அன்னச் சேவலும்-இடுமணலாகிய மணற்குன்றினது வெள்ளிய இடத்தினை நிறந்தெறியாது மறைக்கும் வெள்ளிய சிறகினையும் விரித்த சூட்ட்னையும் சிவந்த கால்களையுமுடைய அன்னச் சேவலும்; இனமும்-அவற்றின் இனமும்; குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ-குறிய குஞ்சுகளைச் சிறகில் அணைத்துக் கொள்ளும் தம்பெடை அன்னங்களோடே பெரிதும் அஞ்சி என்க.

     (வி-ம்.) புளினம்-மணற்குன்று. சிறை-சிறகு. தூவி-சூட்டு. பார்ப்பு-குஞ்சு. அன்னச்சேவலும் என ஒட்டுக. இனம் என்றது குருகு முதலியவற்றை எனினுமாம்.

15: இரவி..........................வைகறைகாறும்

     (இ-ள்) இரவிக்கு அண்ணிய-ஞாயிறு தோன்றுதற்கு அணித்தாகிய; வைகறைகாறும்-வைகறைப்பொழுது முடியுந் துணையும் என்க.

     (வி-ம்.) இரவி-ஞாயிறு. வைகறைப்பொழுதை அடுத்து ஞாயிறு தோன்றுதலின் அவ்வைகறை அதன் அண்ணியது எனப்பட்டது. அண்ணுதல்-அணித்தாதல்.

14-15: சூழும்.....................அழுங்குதற்கே

     (இ-ள்) சூழுங்காவில்-யாம்சூழ்ந்து விலையாடுதற்கிடமான சோலையினிடத்தே; துயில்மாறி அழுங்குதற்கு-துயில் கொள்ளாது ஆரவாரித்தற்கு என்க.

     (வி-ம்.) அன்னம் குடம்பையில் பெடையொடு வெரீஇ வைகறைகாறும் துயில்மாறி அழுங்குதற்கு என்க. யாம்சுழுங்கா என்க. துயில்மாறி அழுங்குதற்கு என மாறுக. அழுங்குதல்-ஆரவாரித்தல்.

16: அலமரல்...............யாமே

     (இ-ள்) அலமரல் என்னைகொல்-அவற்றிற்கு அவ்விடத்தே எய்திய சுழற்சிதான் யாதோ; யாம் அறிந்திலம்-யாம் அறிகின்றிலேமே என்க.