|
பும் உவமை. அன்னங்கள்
ஏந்திய இணர்கொள்வாய்க்குடம்பை என்க.
சேவலன்னந்
தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக்
காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன (சிந்தா.
65) |
எனவரும் சிந்தாமணியால்
அன்னங்கள் பூவாற் கூடியற்றுதல் பெற்றாம்.
21-24:
எக்கர்...........................இனமும்
(இ-ள்)
எக்கர்புள்ளினம் வெண்மை இடம் மறைக்கும் சிறைவிரி தூவிச் செங்கால் அன்னச் சேவலும்-இடுமணலாகிய
மணற்குன்றினது வெள்ளிய இடத்தினை நிறந்தெறியாது மறைக்கும் வெள்ளிய சிறகினையும்
விரித்த சூட்ட்னையும் சிவந்த கால்களையுமுடைய அன்னச் சேவலும்; இனமும்-அவற்றின் இனமும்;
குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ-குறிய குஞ்சுகளைச் சிறகில் அணைத்துக் கொள்ளும்
தம்பெடை அன்னங்களோடே பெரிதும் அஞ்சி என்க.
(வி-ம்.)
புளினம்-மணற்குன்று. சிறை-சிறகு. தூவி-சூட்டு. பார்ப்பு-குஞ்சு. அன்னச்சேவலும் என ஒட்டுக.
இனம் என்றது குருகு முதலியவற்றை எனினுமாம்.
15:
இரவி..........................வைகறைகாறும்
(இ-ள்)
இரவிக்கு அண்ணிய-ஞாயிறு தோன்றுதற்கு அணித்தாகிய; வைகறைகாறும்-வைகறைப்பொழுது முடியுந்
துணையும் என்க.
(வி-ம்.)
இரவி-ஞாயிறு. வைகறைப்பொழுதை அடுத்து ஞாயிறு தோன்றுதலின் அவ்வைகறை அதன் அண்ணியது
எனப்பட்டது. அண்ணுதல்-அணித்தாதல்.
14-15:
சூழும்.....................அழுங்குதற்கே
(இ-ள்)
சூழுங்காவில்-யாம்சூழ்ந்து விலையாடுதற்கிடமான சோலையினிடத்தே; துயில்மாறி அழுங்குதற்கு-துயில்
கொள்ளாது ஆரவாரித்தற்கு என்க.
(வி-ம்.)
அன்னம் குடம்பையில் பெடையொடு வெரீஇ வைகறைகாறும் துயில்மாறி அழுங்குதற்கு என்க.
யாம்சுழுங்கா என்க. துயில்மாறி அழுங்குதற்கு என மாறுக. அழுங்குதல்-ஆரவாரித்தல்.
16:
அலமரல்...............யாமே
(இ-ள்)
அலமரல் என்னைகொல்-அவற்றிற்கு அவ்விடத்தே எய்திய சுழற்சிதான் யாதோ; யாம் அறிந்திலம்-யாம்
அறிகின்றிலேமே என்க.
|