|
என்பனவுமாம். இரண்டுருவமாவன:
அம்மையும், அப்பனும் என்க. முதல் என்றது சிவலிங்கத் திருவுருவத்தை.
29-30:
துறவால்..................................என்னவும்
(இ-ள்)
துறவால் அறனால் பெரல்இல் மாந்தர்-துறவறத்தாலாதல் இல்லரத்தினாலாதல் பிறவிப்பயனைப்
பெறுதலில்லாத மாக்களினது; விள்ளா அறிவின் உள்ளமுமென்னவும்-விரிதலில்லாத அறிவினையுடைய
நெஞ்சம் போலவும் என்க.
(வி-ம்.)
இருவகை அறநெறிகளில் நின்று ஒழுகிப் பிறவிப் பயனைப் பெறாத மாக்களினுடைய உள்ளம்
அறியாமையால் பெரிதும் இருண்டு கிடத்தலின் உவமையாக்கினார். விள்ளல்-புடைபெயர்தல்.
எனவே விரிதல் என்றாயிற்று. துறவறமும் இல்லறமும் இரண்டும் அறமேயாயினும் சிறப்பு நோக்கிப்
பொருள்களைத் துரத்தல் கருதித் துறவறத்தைத் துறவு என்றும் பொருள்களை வழங்குதல் கருதி
இல்லறத்தை அறம் என்றும் கூறினார். என்னை? ஈதல் அறம் என்பவாகலின் என்க.
31-34:
செக்கர்த்..............................ஓதுகவே
(இ-ள்)
செக்கர்த் தீயொடு புக்க நன்மாலை-செவ்வானமாகிய சுடு நெருப்போடே வந்த மிக்க மாலைக்காலமே!;
என் உயிர் வளைந்த தோற்றம்போல-நீ இப்பொழுது என் உயிரைச் சூழ்ந்துகொண்டுள்ள
காட்சியைப்போல; நால்படை வேந்தன் பாசறையோர்க்கும் உளையோ-நால்வகைப் படைகளையுமுடைய
வேந்தனுடைய பாசறையின்கண்ணராகிய எம்பெருமானையும் இங்ஙனம் சூழ்ந்து கொண்டுள்ளனையோ?
இலையோ; மனத்திறன் ஒதுக-உன் நெஞ்சத்திலுள்ள கருத்தினை எனக்குக் கூறுவாயாக என்க.
(வி-ம்.)
என் உயிரைச் சுட்டெரித்தற்கு நெருப்புங் கொணர்ந்துள்ளாய் என்பாள், செக்கர்த்
தீயொடு புக்க நன்மாலை என்றாள். நன்மாலை என்றது ஈண்டு அதன் பண்பு மிகுதியை உணர்த்தி
நின்றது. நல்ல பாம்பு என்றாற்போல என்க. இனி நன்மாலை என்றது இகழ்ச்சி எனினுமாம்.
மாலை: அண்மைவிளி. என் உயிரைப் போக்குதலே நின் கருத்தென்பாள் என் உயிர் வளைந்த
தோற்றம்போல என்றாள்.
மாலையோ
வல்லை மணந்தா ருயிருண்ணும்
வேலைநீ வாழிபொழுது |
(குறள். 1221) |
எனவும்,
பொருண்மாலை
யாளரை யுள்ளி மருண் மாலை
மாயுமென் மாயா வுயிர் |
(குறள். 1230) |
எனவும்,
|