|
புள்ளும் பிறவுமாம்.
இதனால் தலைவியின் பேரன்பு புலனாதல் உணர்க. இதனோடு,
அன்னவள் கூறுவா
ளரசர்க் கத்தையர்க்
கென்னுடை வணக்கமுன் னியம்பி யானுடைப்
பொன்னிறப் பூவையுங் கிளியும் போற்றுகென்
றுன்னுமென் றங்கையர்க் குணர்த்து வாயென்றாள்.
(கம்ப.
அயோத். தைலமா. 40) |
எனவரும் இராமாவதாரத்தையும்
ஒப்பு நோக்குக.
19-21:
தழல்...........................மிடற்றோன்
(இ-ள்)
தழல்விழி பேழ்வாய் தரக்கின்-கனல்கின்ற கண்களையும் பெரிய வாயினையுமுடைய புலியினது;
துளிமுலை-பால் துளிக்கும் முலையின்கண்; பைங்கண் புல்வாய் பால் உணக்கண்ட-பசிய கண்களையுடைய
மான்கன்று பால் உண்ணும்படி அருளாட்சி செய்தருளிய; அருள்நின்ற பெருமான்-அருளே நிறைந்த
எம்பெருமானாகிய; இருள்நிறை மிடற்றோன்-இருள் மலிந்த மிடற்றினையுடைய சோமசுந்தரக்கடவுளினது
என்க.
(வி-ம்.)
செங்கோன்மையின் சிறப்புணர்த்துவாள் புலி முலையினை மான்கன்று உண்ணக் கண்ட என்றாள்.
பொருதுறைசேர்
வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்
(கம்ப. க. குலமுறை. 5) |
எனப் பிற சான்றோரும்
ஓதுதல் உணர்க. தரக்கு-புலி.
22-25:
மங்குல்...........................குறியே
(இ-ள்)
மங்குல் நிறை பூத்த மணி உடுக்கணம் என-விசும்பிடமெல்லாம் நிறையப்பூத்துள்ள அழகிய
விண்மீன் கூட்டம்போல; புன்னை பொதும்பர் பூ நிறை கூடல்-புன்னை மரச் சோலைகளெங்கும்
மலர்கள் நிறைந்துள்ள மதுரை நகரத்தின்கண்; நும்பொன் அடி வருந்தியும் கூடி-நுங்களுடைய
திருவடிகள் நோகும்படியும் எம்பொருட்டாகச்சென்று சேர்ந்து; அன்னையர்க்கு இக்குறி உதவல்
வேண்டும்-என்னை இழந்து ஆங்கு அலமந்திருக்கும் என் தாய்மார்களுக்கு யான் இங்குக் கூறிய
இம்மொழிகளை அறிவுறுத்துதல் வேண்டும் என்க.
(வி-ம்.)
மிடற்றோனுடைய கூடல் என இயைக்க. மங்குல்-விசும்பு வின்மீன்கள் புன்னைமலர்களுக்குவமை.
நியிர் ஆண்டுச் செல்லுதல் மிகையெனக்கொள்ளினும் என்பொருட்டு வருந்தியும் செல்லுதல்
வேண்டும் என்பாள் நும் பொன்னடி வருந்தியும் கூடி என்றாள். தாய்மார் நற்றாய் செவிலித்தாய்
எனப் பலராகலின் அன்னை
|