பக்கம் எண் :

மூலமும் உரையும்331



     (வி-ம்.) வீதி-நேராக ஓடும் ஓட்டம். குத்துதல்-குதித்தல். பாரிடம்-பூதம். பிறை தம் பல்லிற்கு ஒப்பாக வாயில் வைப்ப என்பது கருத்து. குணங்கு கூளி என்பன பேயின் வகைகள். மத்தி யந்தணன்-ஒரு துறவி. வரம்பெறுமாறு சொல்லி விடுப்ப என்க. சொலி: இடைக்குறை. புலிக்கால் முனிவன்-புலிக்கால் போன்ற காலையுடைய முனிவன.் சூயை அனசூயை என்பதன் முதற்குறை. பணம்-படம். அடவி-காடு: ஈண்டு மிகுதி குறித்து நின்றது. திருக்கூத்தின் இன்பத்தினைப் புலிக்கான் முனிவனும் பதஞ்சலியும் கண்வழியாக உட்கொண்டு நெஞ்சில் நிரப்பிக்கொண்டனர் என்பது கருத்து. பிறகூத்துப் போலாது காண்போர்க்குப் பேரின்பச் செல்வத்தினை நல்குதலின் திருநடம் என்றார். உலகு: ஆகுபெயர். உயிர்க்குயிராகிய பெருமான் என்க. இறைவன் உயிர்க்குயிராய் இருப்பதன் என்பதனை,

உருவொடு கருவி யெல்லாம் உயிர்க்கொடு நின்று வேறாய்
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
வருபவ னிவைதா னாகியும் வேறுமாய் மன்னி நின்றே” (சித்தியார். 93)

எனவரும் சித்தியாரானும் உணர்க.

10-13: கடல்......................குன்றமும்

     (இ-ள்) கடல்மா கொன்ற-கடலிடத்தே முளைத்து நின்ற மாமரமாகிய சூரபதுமனைக் கொன்ற; தீபடர் நெடுவேல்-தீப்பிழம்பு பரவா நின்ற நெடிய வேற்படையினையுடைய; உருள் இணர் கடம்பின் நெடுந்தார் கண்ணியன்-தேருருளையொத்த மலர்க் கொத்துக்களையுடைய கடம்பினது மலராற் புனைந்த நெடிய தாரினையும் கண்ணியையு முடைய முருகப் பெருமான்; அரிமகள் விரும்பி-தேவேந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரை விரும்பி; பாகம் செய்து-(பராசரன் மக்களை) பரிபக்குவமுறச் செய்து; களியுடன் நிறைந்த-மகிழ்ச்சியோடு நிறைந்துள்ள; ஒரு பரங்குன்றமும்-ஒப்பற்ற திருப்பரங்குன்றமும் என்க.

     (வி-ம்.) மா-மாமரமாகிய சூரபதுமன். உருள்-தேருருள். இது கடப்ப மலருக்குவமை. தார்-மார்பிலணியும் மாலை. கண்ணி-தலையில் அணியும் மாலை. இவற்றை,

“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
 வண்ண மார்பின் தாருங் கொன்றை”
(புறநா. கடவுள்)

எனவரும் பிறசான்றோர் கூற்றானும் உணர்க. அரி-இந்திரன். பாகம்-பக்குவம். இனி அரிமகளை மணந்து ஒருபாகத்தே அமர்த்தி எனினுமாம்.