பக்கம் எண் :

374கல்லாடம்[செய்யுள்47]



லியப் புகை; விண்ணொடும் விம்ம - வானமெங்கும் பரவா நிற்ப; இருநாள் திசையும் உண்பலி தூவி - எட்டுத் திசைகளினும் சோற்றுப் பலியினை இறைத்து; நால்நூல் மாக்கள் - நாலு கின்ற பூணூலையுடைய பார்ப்பனர்; நணி குறிசொற்று - வந்து குறிகளைச் சொல்லியதால் என்க.

     (வி-ம்.) விரிபொரி: வினைத்தொகை. தெய்வகுலம் - தேவ கோட்டம். உண்பலி- தெய்வம் உண்ணும் பலி; என்றது சோற்றுப் பலியை. நால்நூல்; வினைத்தொகை. நால்நூல் மாக்கள் என்றது இகழ்ச்சி. வேதம் ஒதாமல் பூணூல் மட்டும் தாங்கித் திரிகின்ற பார்ப்பனர் என்றவாறு. நண்ணி - நணி என இடைகுறைந்து நின்றது. சொற்று - சொல்லி. இதனைச் செயவெனெச்சமாக்கி ஏதுவாக்குக.

8 - 12: பக்கம் . . . . . . . . . . குருகினமும்

     (இ-ள்) நெடுநகர் முன்றில் - நெடிய நகரத்தினது முற்றத்தின்; பக்கம் சூழ்ந்த- பக்கங்களிலே சூழ்ந்துள்ள; கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க்காலும் - கரையை அகழ்ந்து எடுத்த மறிக்கப்பட்ட நீரோடும் வாய்க்காலும்; வெள்கார்ப் பெய்யும் நாள் குறித்து - வெள்ளிய கார்நெல்லை விதைக்கும் நாளைக் குறித்துக்கொண்டு; உழுநரும்- உழுகின்றவர்களும்; சூல் நிறைந்து உளையும் சுரிவளை சாற்றும்-கருமுதிர்ந்து வருந்தா நின்ற சுரிந்த முகமுடைய சங்குகளின் ஆரவாரமும்; இனம்கயல் உண்ணும் களிகுருகு இனமும் - கூட்டமான கயல்மீனைத் தினன்ாநின்ற களிப்பினையுடைய பறவைக் கூட்டங்களும் என்க.

     (வி-ம்.) நகர் - ஈண்டு மதுரை. கோடு - கரை. மறிநீர்: வினைத்தொகை. நீர்க்கால் - வாய்க்கால். கார் - ஒருவகை நெல். உளைதல் - வருந்துதல். வளை- சங்கு. குருகு - பறவை. நாரை எனினுமாம்.

13 - 15: வரை . . . . . . . . . . . . . ஈர்க்குநரும்

     (இ-ள்) வரை பறை அரிந்த வாசவன் தொழுது - மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரனை வணங்கி; நிரைநிரை விளம்பி - வரிசை வரிசையாக நின்று குரவைபாடி; வழிமுடி நடுநரும் - முறையே நாற்றுமுடியினை அவிழ்த்து நடுகின்ற உழத்தியரும்; நாறுகழிதுற்ற சகடு - நாற்று முடிகளை நிரம்பப் பெய்த வண்டிகளை; ஈர்க்குநரும் - இழுத்துச் செல்கின்றவர்களும் என்க. (வி - எம்.) பறை - சிறகு. வாசவன் - இநதிரன். இவன் மருத நிலத்துத் தெய்வமாதலால் நாற்று நடுகின்ற உழத்தியர் இவனைத் தொழுது நடுவாராயினர் என்க. இவன் மருதநிலத் தெய்வமாதலை 'வேந்தன் மேய தீம்புன லுலகமும்' (தொல். அகத். ரு) எனவரும் சொல்காப்பியத்தானும் உணர்க. நாறு - நாற்று. கழி : மிகுதி குறித்த உரிச்சொல். துற்றுதல் - நிறைத்தல். சகடு - வண்டி.