பக்கம் எண் :

392கல்லாடம்[செய்யுள்50]



இகழ்ச்சிக் குறிப்பு. தலைவன் அரசனாகலின் அவனுக்கியல்பாக உள்ள செருக்கினையும் விடுத்து வந்துள்ளான் என்பாள் முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி என்றாள்.

6 - 11: பொன் . . . . . . . . . . சிறுவனை

     (இ-ள்) பொன்உறு ஞாழல் பூவுடன் கடுக்கும்-பொன்னிறம் பொருந்திய ஞாழற் பூவினையொத்த; பெழ்வாய்ப் புலி உகிர் சிறுகுரல் விளங்க - பெரிய வாயினையுடைய புலியினது நகத்தாலியன்ற அணிகலன் தனது சிறிய கழுத்திற்கிடந்து விளங்காநிற்ப; அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டி - அமிழ்தினையொத்த வாயூறல் சிந்துகின்ற செங்குமுத மலரையொத்த தன் வாயினைக் குதட்டி; பழங்கொள் தத்தை வழங்குசொல் போலும் மழலை கிளவியும் - பழத்தையே உணவாகக் கொள்ளுகின்ற கிளி மொழிகின்ற மொழியையொத்த மழலைச் சொல்லையும்; இருநிலத்து இன்பமும் ஒருவழி அளிக்கும் - இம்மையும் மறுமையுமாகிய ஈரிடத்தும் உண்டாகும் இன்பங்களையும் ஓரிடத்தே உதவுகின்ற; இருங்கதி சிறுவனை - பெரிய வீட்டின் பத்தைத் தரும் இயல்புடைய நம் புதல்வனை என்க.

     (வி-ம்.) பொன்: ஆகுயெர். ஞாழற்பூ புலிநகத்திற்குவமை. புலியுகிர் அதனாலாய அணிகலனுக்காகுபெயர். குரல் கழுத்திற்காகுபெயர். அமுதம் - ஈண்டு வாயூறல். குமுதம் - செங்கழுநீர் மலர். தத்தை - கிளி. மழலைக்கிளவு - எழுத்துருவம் பெறாத மொழி. இருநிலம் - இம்மை மறுமை. இருங்கதி என்றது வீடு போற்றினை.

"எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
 பண்புடை மக்கட் பெறின்"             (குறள். 62)

என்பவாகலின் இருநிலைத்தின்பமும் ஒருவழியளிக்கும் இருங்கதிர்ச் சிறுவன் என்றாள், சிறுவன் என்றது ஈண்டு மகன் என்பதுபட நின்றது.

12 - 14: தழல் . . . . . . . . . . . . . . . புகுதலில்

     (இ-ள்) தழல்விழி மடங்கல் கொலை அரிக்குருளையை - தீப்போன்ற கண்களையும் பிடரிமயிரையும் கொலைத்தொழிலையுமுடைய சிங்கத்தின் குட்டியை; பொன்மலை கண்ட பொலிவு போல - பொன்மலையின்மேல் கண்டதொரு காட்சியைப்போல; மணிகெழு மார்பு அகத்து அணிபெறப் புகுதலில் - மணியணிகலன் பொருந்திய தனது மார்பின்கண் அழகுண்டாகச் செர்த்தி வருதலால் என்க.

     (வி-ம்.) தழல்-தீ மடங்கல்-மடங்கிக் கிடக்கும் பிடரிமயிர். அரிசிங்கம். குருளை-குட்டி. சிங்கக்குட்டி புதல்வனுக்கும் பொன்மலை தலைவன் மார்பிற்கும் உவமைகள். நம்பெருமான் அரசனாயிருந்தும்