பக்கம் எண் :

398கல்லாடம்[செய்யுள்51]



யானை. பழிநாடு - பழிச்செயலைச் செய்யும் நாடு. அஃதாவது கொலைத் தொழில் செய்யும் நாடு என்றவாறு. நீயோ அறம்வளர் நாட்டினை இவளோ பழிவளர்க்கும் நாட்டினள் என்றவாறு.

13 - 14: நீயே . . . . . . . . . . நகரோய்

     (இ-ள்) நீயே எழுநிலை மாடத்து இளமுலை மகளிர் நடம்செய-இனி நீ தானும் வானுறவெழுந்த நிலைமையினையுடைய மாளிகையிடத்தே இளமையுடைய மகளிர் கூத்தாடாநிற்ப; தரளவடம் தெறும் நகரோய் - அவர்களுடைய முத்துவடங்கள் அறுந்து சிந்துதற்கிடமாகிய வளமிக்க நகரத்தையுடையோய் என்க.

     (வி-ம்.) எழுநிலை மாடம்: வினைத்தொகை. இனி ஏழு மேனிலைகளையுடைய மாடமுமாம். நடம் - கூத்து. தரளவடம் - முத்துமாலை.

19 - 20: இவளே . . . . . . . . . . வைப்பினளே

     (இ-ள்) இவளே கடம் பெறு கரிக்குலம் மடங்கல் புக்கு அகழ - இனி இவள்தான் மதத்தையுடைய யானைக் வட்டங்களைச் சிங்கம் எதிர்ந்து அவற்றின் மத்தகத்தைப் பிளத்தலாலே; தெரித்திடும் முத்தம் திரட்டு வைப்பினள் - சிதறா நின்ற முத்துக்களைப் பொறக்கிச் சேர்க்கின்ற வன்னிலத்தினள் ஆவள் என்க.

     (வி-ம்.) கடம்-மதம். கரி - யானை, மடங்கல் - தசிங்கம். வைப்பு-நிலம். நீ நகரத்தையுடையோய்; இவள் காட்டினள் என்றவாறு.

21 - 22: நீயே . . . . . . . . . . அன்றே

     (இ-ள்) நீயே அணிகெழு நவமணி அலர் எனத் தொடுத்த - இனி நீதானும் அழகு பொருந்திய ஒன்பது வகைப்பட்ட மணிகளை மலர்மாலை போலத் தூக்கிய; பொன்கொடி தேர்மிசைப் பொலிகவை - பொன்னாலியன்ற கொடிகளையுடைய தேரின்மேல் ஏறிப் பொலிவுறுகின்ற சிறப்பினையுடையை என்க.

     (வி-ம்.) நவமணி - ஒன்பதுவகை மணிகள். அவையாவன: கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வயிடூரியம் என்பன. அவர்: மாலைக்கு ஆகுபெயர். மலர்மாலையைத் தூங்கவிடும் அத்துணை எளிமையாக நவமணி மாலைகளையே தூங்கவிடும் தேர்என அவனுடைய திருவுடைமையைச் சிறப்பித்த படியாம். தொடுத்தல் - தொங்கவிடுதல். பொன்தேர், கொடித்தேர் எனத் தனித்தனி கூட்டுக. அன்று ஏ: அசைகள்.

23 - 25: இவளே . . . . . . . . . . . . . . . ஆதலின்

     (இ-ள்) இவளே மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற - இனி இவளோவெனில் அழகிய அலகினையுடைய