|
கிளிகள் தினைக்கதிரைக்
கொய்யாமல் ஓட்டுதற்கு; நெடுஇதண் ஏறும் இப்புனத்தினள்- நெடிய பரண்மேலே ஏறும் சிறுமையினையுடைய
இத்தினைப் புனத்தின்கண் இருப்பவள்; ஆதலின் - இங்ஙனமிருத்தலின் என்க.
(வி-ம்.)
மணிவாய் - மாணிக்கம் போன்ற அலகுமாம். கிள்ளை - கிளி. துணியாது என்பது துயித்தலின்
எதிர்மறை, துணித்தல் - கொய்தல். இதண் - பரண். நீ பொன்தேரில் ஏறும் பெருமையுடையை;
இவள் கிளிகடியப் பரண் ஏறும் சிறுமையுடையள் என்றவாறு.
25
- 33: பெரும்புகழ் . . . . . . . . . . . . . . . நசையே
(இ-ள்)
பெரும்புகழ் அணைகுதி ஆயின் - தநீதானும் நின் தகுதிக்கேற்ற பெரிய புகழை அடைய வேண்டினையெனின்;
நாரணன் படர தேவர் கெட்டு ஓட - கடல் கடைந்த திருமால் என்செய்கோ எனக் கையற்று
வருந்தவும் வடந்தொட்டீர்த்த அமரர்கள் அஞ்சி ஓடாநிற்பவும்; வளிசுழல் விசும்பின்
கிளர் முகடு அணவி கருமுகில் வளைந்து பெருகியபோல - காற்றுச் சுழன்று வீசுதற்கிடனான
வானத்தினது உயர்ந்த முகட்டினை அளாவி கரிய முகில்கள் சூழ்ந்து பெருனினாற்போன்று;
நிலைகெட பரந்த கடல்கெழு விடத்தைமறித்து - தனது அமைதி நிலைமைகெடக் கலக்குண்டு பரவிய
திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தடுத்து; அவர் உயிர்பெற குறித்து- அத்திருமால்
முதலியோர் உயிருடன் வாழ்தலைக் கருதி; உண்டு அருளி திரு ளம் கறுத்த அருள்பெரு நாயகன்
- அள்ளி உட்கொண்டருளித் தனது அழகிய மிடறு கறுத்த அருளையுடைய முதற்கடவுளது; கூடல் கூடினர்போல
- மதுரை நகரத்தையடைந்த மெய்யடியார் அவாவறுத்தாற்போல நீதானும்; இவள் கழைத்தோள்
நசைநாடல் - இழிகுலத்தாளாகிய இவளுடைய மூங்கிலையொத்த தோளைத் தழுவும் ஆசையை நாடாதொழிக
என்க.
(வி-ம்.)
நாரணன் - திருமால். படர்தல் - நினைவான் வருந்துதல். வளி - காற்று. விசும்பு - வானம்.
கிளர்முகடு - உயர்ந்த முகடு. அணவுதல் - அளாவுதல். நஞ்சிற்கு முகில்கள் உவமை. கடல்-ஈண்டுப்
பாற்கடல். அவர் - அந்நாரணன் முதலியோர். களம் -மிடறு களம் கறுத்தமைக்குக் காரணமான
அருளையுடைய நாயகன் என்றும் பெருநாயகன் என்றும் தனித்தனி இயைக்க. மதுரையை எய்திய
அடியார் நசையை நாடாமையோல நீயும் இவள்தோள் நசையை நாடற்க என்றவாறு. நாடல்: அல்ஈற்று
எதிர்மறை வயிங்கோள். இவன் என்றது தலைவியை. கழை-மூங்கில். இச்செய்யுளோடு
"இவளே, கான
னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பொருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே |
|