|
தாயே! என் மகள் என்னினுங் காட்டில் சிறந்து விளங்குகின்றாள் என்றாளாயிற்று. இதுகாறும் கூறியவற்றால்,
"கற்புங் காமமு நற்பா லொழுக்கமு
மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும்
பிறவு மன்ன கிழவோண் மாண்புகள்" (தொல்.
சூ. 152) |
செவிலியால் நற்றாய்க்
குணர்த்தப்பட்டமை உணர்க.
20
- 24: கொலை .......................................... கடந்து
(இ-ள்)
கொலைமதில் மூன்றும் - கொலைத்தொழில் செய்யும் முப்புரத்தையும்; இகல் அறக்கடந்து
- பகை நீங்க வென்று; பெருநில எரித்த புகர்முகம் துளைக்க- மிகுந்த நிலாவொளியை வீசிய
கொம்புகளையும் புள்ளிகளையுடைய முகத்தையும் துளையுடைய கையையும் உடைய; மதம்பொழி கறையடி
- மதநீரைப் பொழிகின்ற யானையானது; அழிதர கடந்து - அழியும்படி வென்று; களவு தொழில்செய்
அரிமகன் உடலம் - களவாகிய போர்த் தொழிலைப் புரிந்த காமவேளினது உடம்பானது; திருநுதல்
நோக்கத்து எரிபெற கடந்து - அழகிய நெற்றிக் கண்ணினால் தீயுண்ணும்படி செய்து வென்று
என்க.
(வி-ம்.)
கொலைமதில் - கொரைத்தொழிலையுடைய மதில். முப்புரம்- மதிலுருவாயித்தலின் அவற்றை
மதில் என்றே கூறினர். இவை இரும்பு, பொன், வெள்ளி என்பவற்றால் இயன்றன. இதனை
"இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசை அன்றோர், துரும்புறச் செற்றகொற்
றத்தெம்பி ரான்தில்லைச் சூழ்பொழிற்கே" என வரும் திருக்கோவையாரானும் உணர்க.
அழிதர : ஒருசொல். அரிமகன் - காமவேள். எரிபெற -தீயுண்ண.
25
- 30: மாறு................................. கடந்து
(இ-ள்)
மாறு கொண்டு அறையும்-ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கூறுகின்ற; மதிநூல் கடல்கிளர்-தம்
அறிவானது நூலாகிய கடலை ஆராய்தலின் ஊக்கமிக்க; சமயக் கணக்கர்தம் திறம் கடந்து
- சமயக்கணக்கர்களுடைய விகற்பங்களுக்கு அப்பாலாகி; புலனொடு தியங்கும் பொய்உளம்
கடந்த-ஐம்புலன்களோடு கூடி மய்ஙகாநின்ற பொய்யுடைய நெஞ்சத்தையுங் கடந்த; மலருடன்
நிறைந்து வான்வழி கடக்கும் பொழில்நிறை கூடல் - மலர்களுடன் நிறைந்து வானவீதியையும்
ஊடுருவிச் செல்லுகின்ற பொழில்களால் நிறைந்த மதுரையில் எழுந்தருளியுள்ள; புதுமதிச்
சடையோன் - இளம்பிறையைத் தரித்த சடையையுடைய இறைவனுடைய; மன்நிலை-நிலைபெற்ற அருள்
|