|
ஒழுகும் ஒழுக்கம். வடசொல்
மயக்கம்-செந்தமிழின்கண் வந்து கலக்கும் வடமொழிக் கலப்பு, அவற்றைப் புணர்த்துதலாவது,
வடசொற் கிளவி வடவெழுத்
தொரீஇ
"எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (தொல். சூ. 884)
எனவரும் இலக்கண முறைப்படி
தமிழ் மொழியின்கண் அமைத்தல. ஐந்தினை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என்னும் இன்ப வொழுக்கங்கள். அமுது: உவமவாகு பெயர். அகப்பொருள் அமுது என்றது இறையனாரகப்
பொருளை என்க.
20
- 24: குறுமுனி................................. கூடல்.
(இ-ள்)
குறுமுனி தேரவும் - அகத்திய முனிவன் நன்கு தெளியவும்; முதல்பெறு புலவர்கள் ஏழ்எழு பெயரும்
கோது அறப் பருகவும் - தலைமை பெற்ற சங்கப் புலவர்களாகிய நாற்பத்தொன்பதின்மரும்
ஐயந்திரிபின்றி உட்கொள்ளவும்; புலன் நெறிவழக்கில் புணர் உலகவர்க்கும் - ஐந்து
புலன்கள் வழியாக இன்பம் துய்க்கின்ற இல்வாழ்வார்க்கும்; முன்தவம் பெயருக்கும் முதல்
தாபதர்க்கும் - அவ் வைம்புலன்களையும் அடக்கி இளமை தொடங்கித் தவத்தைப் பெருக்காநின்ற
முதன்மையுடைய துறவிகளுககும்; நின்று அறிந்து உணர்த்தவும்-தாம்தாம் நிலைபெற்றுணர்ந்து
மாணவர்க்கு அறிவுறுத்தவும்; தமிழ்ப் பெயர் நிறுத்தவும்-தமிழ் என்னும் மொழியின்
புகழை உலகில் நிலைநிறுத்தவும்; எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் - 'அன்பினைந்திணை'
என அடியெடுத்து விரித்தருளிய தேவதேவனுரடைய; மெய்த தவக் கூடல்-மெய்யாய தவப்பயனைத்
தருகின்ற மதுரை நகரிடத்தே என்க.
(வி-ம்.)
குறுமுனி - அகத்தியன், புலவர் ஏழ்எழு பெயரும் என்றது கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரையும்.
கோது - குற்றம். அவை ஐயமும் திரிபும் என்க. அமுதம் என்பதற்கேற்பப் பருகவும் என்றார்.
புலன் நெறி என்றது இல்லறத்தை. தாபதர் -துறவிகள். மாணவர்க்கு உணர்த்தவும் என்க.
பெயர் - புகழ்.
24
- 30 விளைபொருள்.......................................இடனே
(இ-ள்)
விளைபொருள் மங்கையர் - பிறர் ஈட்டிய பொருளை விரும்புகின்ற பரத்தை மகளிர்; முகத்தினும்
கண்ணினும்-தம் முகத்தாலும் கண்களாலும்; முண்டக முலையினும்-தாமரை யரும்பையொத்த முலைகளானும்;
சொல்லினும் தொடக்கும் புல்லம் போல - சொற்களாலும் வயப்படுத்தும் பொய்யாய தழுவுதல்
போல; எம்மிடத்து இலது - எம்பால் இல்லை; அங்ஙனம் இல்லையாகவும்; இவ்விடன் தம்
உளம்
|