|
தனால் ; மனம்எழு வருத்தம்
உடைய ஆகலின்-மனத்தின்கண் எழாநின்ற துன்பத்தை உடையை ஆதலால் என்க.
(வி-ம்.)
சயிலக் கணவனைப் புணர்ந்து திருமுதலிய மக்களைக் கண்கலுழ்ந்து கலங்கி அலறி நொந்து
ஈன்றதனால் நீ மனவருத்தம் உடையையாக இருக்கின்றனை ஆகையால் என்க. இருநிலம் என்புழி,
இருமை - பெருமை. வலிகெழு சயிலம் நோன்மைப் பொன்முடி என வலிமையைச் சயிலத்திற்கும்
நோன்மையை முடிக்கும் ஏற்றுக. சயிலம் - மலை. அஃதாவது மந்தரமலை. திரு - திருமகள்,
குழவி, பிள்ளை மகவு என்பன ஒருவகையணி. உலகு : ஆகுபெயர். கண்ணொடு என்புழி மூன்றனுருபு
ஏழனுருபின்கண் மயங்கிற்று. கண் முத்தம் என்பனவற்றைச் சிலேடை வகையால் பொருள் காண்க.
8
- 9 : பெருமயல் ........................ கொண்டு
(இ-ள்)
பெருமயல் எய்தா நிறையினள் ஆக - மிக்க மயக்கத்தைப் பொருந்தாத மாட்சிமையுடையளர
யிருக்கும்படி ; என் ஒரு மயிலையும் நின்உளங் கொண்டு - என் தோழயாகிய மயில் போன்ற
இப்பெண்ணையும் நின் மகளாகக் கருதி என்க.
(வி-ம்.)
கடலே நீ வருந்தி மகப்பல பெற்றுள்ளாய் ஆதலின் மகவருமை நன்குணர்வை, எம்பெருமாட்டியையும்
நின்மகளாகக் கருதி(க் கொள்க) என்றவாறு. நிறையினள் - துன்புறாது நெஞ்சை நிறுத்தும்
பண்புடையளாக எனினுமாம், மயில் : உவமவாகு பெயர்.
10
- 16: தோன்றி...............................பொதியமும்
(இ-ள்)
தோன்றி நின்று அழியா துகள்அரு பெருந்தவம் - பிறந்து இருந்து இறவாமைக்குக் காரணமான
குற்றமற்ற பெரிய தவத்தையே ; நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு - தான் பெருதற்குரிய செல்வமாகக்
கருதி வளர்த்துள்ள அகத்திய முனிவனுக்கு ; அருளுடன் தாளமும் சந்தும் எரிகெழு மணியும்
- பேரன்புடன் முத்துக்களையும் சந்தனத்தையும் ஒளிபொருந்திய மணிகளையும் ; முடங்குளை
அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் - வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கத்தினால் அகழப்பட்ட
வளைந்த யானைக் கொம்புகளையும் ; அகிலும் கனகமும் - அகிலையும் பொன்னையும் ; அருவிக்கொண்டு
- தனது அருவிகளாகிய கையில் ஏந்திக்கொண்டு ; இறங்கி பொருனை அம் கன்னிக்கு - கீழிறங்கி
வந்து பொருனையாறு என்னும் அழகிய பெண்ணுக்கு ; அணிஅணி பூட்டும் - அழகிய அணிகலன்களாக
பூட்டா நின்ற ; செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும் - செம்பென்னும் உலோகம்
விரவிய உடம்பால் மூடப்பெற்ற தெய்வத் தன்மையுள்ள பொதியமலையையும் என்க,
(வி-ம்.)
அழியாமைக்குக் காரணமான தவம், துகளறு தவம் எனத் தனித்தனி கூட்டுக, நிதி - ஈட்டிவைக்கும்
செல்வம் ; குறுமுனி -
|