பக்கம் எண் :

மூலமும் உரையும்625



தர்கள் வனங்கத்தகுந்த தனது பெருமையும்; இருள் அறு புலனும்-மாசற்ற அறிவுடைமையும்; மெய்ப்பொருள் உறும் கல்வியும்-உண்மைப் பொருளை எய்துதற்கேற்ற மெய்க் கல்வியும்; அமரர் பெற்று உண்ணும் அமுது உருக்கொண்டு-தேவர்கள் பெற்று உண்ணாநின்ற அமிழ்தத்தின் சுவையுடைத்தாய்; குறுஞ்சொல் குடட்டிய மழலை மெல் கிளவியில்-இளஞ்சொல்லாகிய குழறிய மென்மையாகிய வேட்கையை விளைக்கின்ற; தளர் நடைச் சிறுவனும்-தளர்ந்த நடையையுடைய மைந்தனும் என்க.

     (வி-ம்.) நிற்கு-நினக்கு. மதி: முன்னிலையசை. தகைமை-பெருந்தன்மை. இருள்-அறியாமை. மெய்ப் பொருள்-இறைப்பொருல். குறுஞ்சொல்-இளஞ்சொல். மழலை-எழுத்துருவம் பெறாத மென்சொல். விளரி-வேட்கைப் பெருக்கம் (சூ. நிக. கக. ளகரவெ. 15)

11 - 14: நின்னிலம்..................தவிர்மோ

     (இ-ள்) புகழ்ந்து நின் நலம் உணும்-புகழ்ந்து பேசி நினது இன்பத்தை நுகர்ந்த; நீதியும் தோற்றமும் மாண்பும் துவரத் தீர்த்த-மெய்ம்மையும் மாண்பும் முற்றும் துறந்த; நம் கவர் மனத்து ஊரன்-நம்முடைய இரண்டுபட்ட நெஞ்சத்தையுடைய தலைவன்; பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும் கொல் என-நமது பருத்த அழகிய ஒளியுடைய முலைகளைத் தழுவுவனோ வென்று; நீ சென்று சென்று இரங்கலை-நீ அடிக்கடி வருந்தாதே கொள்; அன்றியுந் தவிர்ம்-அவன் பிரிந்து போவதன்றியும் பிரியாது தங்குவன்காண் என்க.

     (வி-ம்.) பொம்மல்-பருமை. கொல்: ஐயத்தின்கண் வந்தது. அன்றியும்-பிரிதலன்றியும், தவிர்ம்-தவிர்வன்.

15 - 21: நெட்டுகிர்....................உறுத்த

     (இ-ள்) நெடு உகிர் கருங்கால் தொல்முலை பெரும்பேய்-நெடிய நகத்தினையும் கரிய காலையும் தோலாகித் தூங்கும் முலையினையும் உடைய பெரிய பேய்கள்; அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப்படர-போர்க்களம் கிடைக்கப்பெற்றுப் பகைவர் அறியும்படி செல்லா நிற்பவும்; பேழ்வாய் இடாகினி தொழுது ஏத்தி-பெரிய வாயையுடைய இடாகினிப்பேய் திருவடிகளை வனங்கி வாழ்த்தி; கையடை கொடுத்த வெள் நிணம் வாய்குழவி-அடைக்கலமாகக் கொடுத்த வெள்ளிய நிணத்தை கவ்விய வாயையுடைய குழந்தை; ஈமம் பெருவிளக்கு எடுப்ப-நன் காடானது பெரிய விளக்கை ஏந்தா நிற்ப; அதன் கடு பொடி கல்.-40