பக்கம் எண் :

மூலமும் உரையும்657



இயலாமல் தாமரை மலர்கள் வாடாநிற்பவும்; கயிவரம் இனத்தொடு எதிர் மலர-ஆம்பல்கள் தம்மினத்தோடே எதிர்ப்படும் இடந்தோறும் மலராநிற்பவும்; குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற-கன்னி மகளிரின் காமமும் கிணற்று நீரும் உள்ளே சுடாநிற்பவும்; நிலமகள் உடலமும் திங்களும் குளிர-நிலமகளின் உடம்பும் திங்கள் மண்டிலமும் குளிராநிற்பவும்; ஒலி கடல் இப்பி-முழங்காநின்ற கடலினிடத்துள்ள இப்பிகள்; தரலம் சூல்கொள-முத்துக்களைக் கருக்கொள்ளவும்; இவை முதல் மணக்க-இன்னோரன்ன குறிகள் தோன்றும்படி என்க.

     (வி-ம்.) இச்செய்யுளில் கார்ப்பருவ நிகழ்ச்சிகள் பெரிதும் அழகாக வருணிக்கப்பட்டிருத்தல் உணர்க. மணந்துடன் போகுநர் என்றது இயற்கைப் புணர்ச்சி எய்திய தலைவன் தலைவியர்களை. பாலை வழியில் தலைவன் தலைவியர் உடன்போக்கிற்கு எயிற்றியர் இயக்கம் தடையாயிருந்தது என்பது கருத்து. புலி-ஆகுபெயர். புலி போன்ற குரலையுடைய எயிற்றியர் எனினுமாம். எயிற்றியர்-பாலைநில மகளிர். பூ-நிலம். குழவியம் கதிர்-இளஞாயிறு. முகில்கள் மறைத்தலின் தாமரை மலர்கல் ஞாயிற்று ஒளி பெறாமல் வருந்தின என்பது கருத்து. திருமலர் திருமகள் இருக்கையாகிய மலர். எனவே தாமரைமலர் ஆயிற்று. கயிரவம்-ஆம்பல். இனம் என்றது நெய்தல். குவளை முதலியவற்றை. குமரியர்-கன்னிமகளிர். கார்ப்பருவத்தில் நீர் உள்ளே வெதுவெதுப்பாக இருத்தல் இயல்பு. கூவல்-கிணறு. தரளம்-முத்து. இப்பிகள் மழை பெய்யுங்கால் செதிளைத்திரந்து மழைத்துளியை ஏற்றுக்கொள்ளுதலால் அத்துளி முத்தாகும் என்பது நம் முன்னோர் கருத்து. ஆதலின் இப்பி தரளம் சூல்கொள என்றார். மணத்தல்-தோன்றுதல்.

30 - 31: எழுந்த...............................விடுமதி

     (இ-ள்) எழுந்த கார் கண்டை-வந்த கார் காலத்தை நீ கண்டாய் அல்லையோ ஆகலின்; வறுநீர் மலர் என மாழ்கலை விடுமதி-வற்றிய நீரிலுள்ள மலர்கள் வாடுதல் போன்று நெஞ்சம் வாடுதலை இனி ஒழிவாயாக என்க.

     (வி-ம்.) நம்பெருமான் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவேன் எனக் கூறிப் போயினராதலின் அவர் கூறிய கார்வந்தது. இனி அவர் தேர் வருதல் ஒருதலை. ஆதலின் வருந்தற்க என்றவாறு. கார்: ஆகுபெயர். கண்டை: வினைத்திரி சொல். மாழ்கல்-வாடுதல். மாழ்கலை என்பதை முன்னிலை யொருமை வினைமுற்றாகக் கொள்ளினுமாம். மதி: முன்னிலையசை.

32 - 39: மறை..........................கூப்புக

     (இ-ள்) மறை அடி வழுத்திய மறை வனத்து ஒருநாள்-வேதங்கள் திருவடிகளை வழிபட்ட திருமறைக்காட்டில் முன்னொரு காலத்தே; மணிசுடர் நறுநெய் கவர்மதி கருப்பைக்கு-அழகிய திருவிளக்கின் நெய்யைப் பருகுதற்கு நினைவுற்ற காரெலிக்கு; கல்.-42