|
குணங்கு-மேலெழாநின்ற
அடர்ந்த சினத்தீயையொத்த கொள்ளிவாய்ப் பேய்கள் என்க.
(வி-ம்.)
வேல்-புகருடைமைக்கு நிணம் புணர்தல் ஏது என்க. நிணம்-ஊங் புகர்-புள்ளி. இணங்குதுணை-பொருந்திய
துணை. காமம் முதலிய ஆறாவன காமம், வெகுளி, இவறல், மயக்கம், தன்முனைப்பு, அழுக்காறு
என்பன. வெகுளுநர்-பெயர். படிறு-பொய்மை. இடையறாது நிற்றலின் கமழும் தீ என்றார்.
தீ-சினத்தீ. உறழ்தல்-ஒத்தல். கொள்ளிவாய்க் குணங்கு-கொள்ளிவாய்ப்பேய். இதற்கு
வெகுளுநர் நெஞ்சத்தில் எழும் சினத்தீ உவமை.
11
- 19: உள்ளுதோறு...............................போல
(இ-ள்)
உள்ளுதோறு இவரிய-நினைத்த இடங்களிலெல்லாம் செல்லுகின்ற; மின்மினி உமிழும் அலர்
துன்கள்ளியை-மின்மினிகள் ஒளி வீசுகின்ற மலர் நிரம்பிய கள்ளி மரங்களை; அன்னை
என்று அணைதரும் அரை யிருள் யாமத்து- எம்முடைய தாய் என்று உறவுகூறி எய்துகின நள்ளிரவாகிய
இருட் பொழுதில்; கடுஞ்சுடர் இரவி விடும் கதிர்த்தேரினை-வெவ்விய சுடர்களையுடைய கதிரவன்
செலுத்துகின்ற ஒளிமிக்க தேரினை; மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து-தீமைக்கெல்லாம்
காரணமாகிய அசுரர்கள் விண்ணுலகத்தை அழித்து; துணைக்கரம் பிடித்து எனத் தோற்றிடும்
பொழில் சூழ்-இரு கைகளானும் பிடித்தாற்போலத் தோற்றுகின்ற சோலை சூழ்ந்துள்ள; கூடல்பதி
வரும்-மதுரை நகரத்தில் எழுந்தருளிய; குணப்பெருங் குன்றினன்-குணங்களால் இயன்ற பெரிய
மலையை யொத்த சிவபெருமானுடைய; தாமரைப்பழித்த இருசரண் அடையாக் கோளினர் போல-செந்தாமரை
மலரை அழகாற் பழித்த திருவடி இரண்டினையும் அடையாத மடவோர் சொல்லைப்போல என்க.
(வி-ம்.)
கொள்ளிவாய்ப் பேய் கள்ளிமரங்களைத் தந் தாய் எனக் கருதி எய்துடற்கிடனான யாமம்
என்றவாறு. உள்ளுதோறும்-தாம் நினைத்த இடங்களிலெல்லாம். இவர்தல்-பரவுதல். மின்மினி
உமிழும் யாமம் முணங்கு அணைதரும் யாமம் எனத் தனித்தனி கூட்டினும் அமையும். அரை யாமம்;
இருள் யாம என இயைக்க. பொழில் உயர்ந்து கதிரவன் தேரைத் தீண்டுதலால் அத்தோற்றம்
அரக்கர் கதிரவன் தேரைக் கைகளாற் பிடித்தாற்போலத் தோன்றும் என்றவாறு. குணம்-எண்குணம்.
அவை முற்கூறப்பட்டன. கோள்-கொள்கை. அடையாமைக்குக் காரணமான கொள்கையுடையார் என்றவாறு.
19
- 24: குறிபல.....................................புணர
(இ-ள்)
பலகுறி குறித்து-பலகுறிகளை எண்ணி; ஐந்து அமர் கதுப்பினள்-ஐந்து பகுதியாக அமைந்த கூந்தலையுடைய
எம்பெருமாட்டியின்; அமைத்தோள் நசைஇ-
|