பக்கம் எண் :

மூலமும் உரையும்683



துள்ள மலைக் குவடுகளாகிய கொடுமுடிகல் நிறைந்த மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் என்னும் இந்த நான்கிடங்களிலே கிருதயுகமும் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்னும் இந்த நான்கு காலங்களிலும்; நிகழ்ந்தன குறியும்-உருவாகிய அம் மாணிக்கங்களின் அடையாளங்களும் என்க.

     (வி-ம்.) சமனொளி சூழ்ந்த குடுமிச்சேகரம் என மாறுக. மாணிக்கங்கள் உருவாதற்குக் குறைவற்ற கதிரொளி காரணம் என்பார் சமனொளி சுழ்ந்த என்றார்; எனவே மிகையான வெப்பமும் மிகையான தட்பமு முடைய நாடுகளிலே மாணிக்கங்கள் தோன்றா என்பது பெற்றாம். நான்கின் என இடமென்றதால் காலமென்றாதல் கூறாமையால் நான்கிடங்களில் நான்கு காலங்களில் என விரித்தோதுக; என்னை?

“வாளவிரு மாணிக்கம் கிரேதமுதலுக நான்கும் வழியே மக்கம்
 காளபுரம் தும்பரம் சிங்கள மிந்நாள் கிடைப்படும்”
                                 (பரஞ்-திருவி-மாணிக்- 37)

எனப் பிற சான்றோரும் ஓதுதல் உணர்க.

     குடுமிச்சேகரம்: இருபெயரொட்டு. குடுமிச்சேகரத்து எனவே மாணிக்கம் குறிஞ்சி நிலத்திலே தோன்றும் என்பது பெற்றாம்.

     நிகழ்தல்-உருவாடல். குறி-அடையாளம்; இலக்கணம்.

14 - 15: குருவிந்தம்...........................நான்கும்

     (இ-ள்) குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு சாதுரங்கம் எனும்-குருவிந்தமும் சௌகந்தியும் கோவாங்கும் சாதுரங்கமும் என்று கூறப்படும்; சாதிகள் நான்கும்-அம்மாணிக்கங்களின் நான்கு சாதிகளும்; என்க.

     (வி-ம்.) இவற்றுள் குருவிந்தம், விந்தம் என்றும் இரத்டவிந்து என்றும் கூறப்படும்; சௌகந்தி, நீலம் என்றும் நீலகந்தி என்றும் கூறப்படும்; கோவாங்கு, படிதம் என்றும் கூறப்படும்; சாதுரங்கம் பதுமம் என்றும், பதுமராகம் என்றும் கூறப்படும். இதனை,

“பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
 விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்”         (சிலப்- 14. 186 - 7)

என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் இதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் நல்லுரையானும் “வன்னியிற் கிடக்கும் வருணநாற் பெயரும் உன்னிய சாதுரங்க மொளிர் குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு தானாகும்மே” என அவர் தரும் மேற்கோளானும் உணர்க.

15 - 20.: தேய்க்கின்...............................பன்னிரண்டும்

     (இ-ள்) தேய்க்கின் நெருப்பில் சோக்கின் அங்கையில் தூக்கின்-இனி அம்மணிகளை ஆராய்வோர் அவற்றைத் தேய்க்குமிடத்தும் தீயின்கன் சேர்க்குமிடத்தும் உள்ளங்கையி