பக்கம் எண் :

686கல்லாடம்[செய்யுள்98]



என வரும் பழம் பாடலினுங் காண்க. அரத்தம்-செவ்வரத்த மலர். திலகம்-குங்குமப்பூ. உலோத்திரம்-வெள்ளுலோத்திர மலர்.

     சோரி-குருதி. கவிரலர்-முண்முருக்கமலர். குன்றி-குன்றிமணி.

35 - 37: அசோக......................ஆறும்

     (இ-ள்) அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு கோகிலக்கண் நீள் இலவு அலர் செம்பு எனத் தரும்-அசோகந் தளிர் நிறமும் அலரிமலர் நிறமும் செம்பஞ்சு நிறமும் குயிற்கண் நிறமும் நீண்ட இலவினது மலர் நிறமும் செம்பின் நிறமும் என்னும் இவற்றை ஒக்கும் என்று கூறப்படுகின்ற; சௌகந்திதன் நிறம் ஆறும்-சௌகந்தி என்னும் சாதிமாணிக்கத்தின் அறுவகைப்பட்ட நிறங்களும் என்க.

     (வி-ம்.) பல்லவம்-தளிர். அலரி-ஒருவகைச் செடி. இதனை அரளி என்றும் கூறுவர். கோகிலம்-குயில். செம்பு-தாமிரம்.

“கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம்
 அசோகப் பல்லவம் அணிமலர்க் குவளை
 இலவத் தலர்களென் றாறு குணமும்
 சௌகந் திக்குச் சாற்றிய நிறனே”

என்பது பழம்பாடல்.

38 - 39: செங்கல்............................ நிறமும்

     (இ-ள்) செங்கல் குராமலர் மஞ்சள் கோவை-செங்கல்லும் குரவமலரும் மஞ்சளும் கொவ்வைக்கனியும்; குங்குமம் அஞ்சில்-குங்குமமும் ஆகிய இவற்றின் நிறங்களாகிய ஐந்தனையும் தனித்தனியே பெற்றுள்ள; கோவாங்கு நிறமும்-கோவாங்கு என்னும் சாதிமாணிக்கங்களின்- நிறமும் என்க.

     (வி-ம்.) செங்கல்-காவிக்கல். குரா-குரவமரம். கோவை-கொவ்வைக்கனி. கோவாங்கிற்குத் திருவிளையாடற் புராணத்தில் ‘கோவாங்க ஒளி குரவு குசும்பைமலர் செங்கல் கொவ்வைக்கனி என்று ஒரு நான்கு’ என நான்கு நிறங்களே கூறப்பட்டன.

40 - 44: திட்டை...............................குற்றமும்

     (இ-ள்) திட்டை ஏறு சிவந்த விதாயம் மொக்கல்-திட்டையும் ஏறும் சிவந்த விதாயமும் மொக்கலும்; புற்று குருதி தொழு தினைமணி கோகனகம்-புற்றும் குருதியும் தொழுவும் தினைமணியும் கோகனகமும்; கற்பம் பாடி மாங்கிசகந்தி வளர் காஞ்சுண்டை என்று-கற்பமும் பாடியும் மாங்கிசகந்தியும் மிகாநின்ற காஞ்சுண்டையும் என்று கூறப்படுகின்ற; ஆங்கு