பக்கம் எண் :

மூலமும் உரையும்83



11-34: ஒரு....................................பெருக்க

     (இ-ள்) பெருவாய் ஒரு முகம் படகம்-பரந்த வாயினையும் ஒரே முகத்தினையுடைய படகம் என்னும் தோற் கருவி; ஒரு விரல் தெரித்தும்-தன்னிடத்தே ஒரு விரலைக் கொண்டு புடைத்தும்; ஐவிரல் குவித்தும்-ஐந்து விரல்களையும் சேர்த்துப் புடைத்தும் முழக்குதலாலே; பெருக்க-முழக்கத்தைப் பெருகப் பண்ணவும் என்க.

     (வி-ம்.) படகம்-ஒருவகைத் தோற்கருவி. இதனை முழக்குவோர் ஒற்றை விரலால் தெரித்தும் ஐந்து விரல்களையும் கூட்டிப் புடைத்தும் முழக்குவர் என்பது பெற்றாம். தெரித்தும் குவித்தும் என்பன ஏதுப் பொருட்டாயின.

15-16: தடா.................................உரப்ப

     (இ-ள்) தடா உடல் உம்பர்-தனது பெரிய உடலின்ல்; தலைபெறும் முழவம்-தலையினைப் பெற்ற முழவம் என்னும் தோற்கருவி; நால் முகம் நடுமுகம் தட்டி உரப்ப-தன் நான்கு முகங்களிலும் நடுமுகத்தினும் தட்டுதலாலே முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) இதனால் முழவம் என்னும் தோற்கருவி உச்சியிலே ஐந்து முகங்கலை உடையது என்பதும் அதனை முழக்குவோர் அவ்வைந்து முகங்களிலும் மாறிமாறிப் புடைத்து முழக்குவர் என்பதும் பெற்றாம். தட என்னும் உரிச்சொல் தடா என நின்றது. தட்டி-தட்ட. உரப்புதல்-ஒலித்தல்.

17-18: ஒருவாய்.................................தாக்க

     (இ-ள்) ஒருவாய் திறந்து உள் கடிப்பு உடல் சல்லரி-ஓரிடத்தைத் திரந்து குமிழினை உள்ளேகட்டிய உடலினையுடைய சல்லரி என்னும் கருவி. அங்கை தலை விரல் தாக்க-உள்ளங்கையாலும் நுனிவிரலாலும் தாக்கப்பட்டு முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) வாய்-இடம். கடிப்பு-குமிழ். விசித்தல்-கட்டுதல். சல்லரி-ஓர் இசைக்கருவி. இதனை உள்ளங்கையாலும் நுனிவிரல்களாலும் தாக்கி முழக்குவர் என்பது பெற்றாம். முழங்கவும் என ஒரு சொல் வருவித்துக் கொள்க.

19-20: கயந்தலை..........................................இரட்ட

     (இ-ள்) கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி-யானைக்கன்றின் அடிபோன்று பரந்த கண்களையுடைய கயிறுகள் அமைந்த துடி என்னும் தோற்கருவி; இருவிரல் உயர்த்தி செருநிலை இரட்ட-இரண்டு விரல்களை உயர்த்தி மாறுபட முழக்குதலாலே முழங்கா நிற்ப என்க.