|
19: நாடு.....................................பெருமான்
(இ-ள்) நாடு இரு முனிவர்க்கு-தன்னையே
நாடுகின்ற பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் இரு முனிவர்களுக்காக. ஆடிய பெருமான்-திருக்கூத்தாடிய
இறைவன் என்க.
(வி-ம்.) முனிவர்-பதஞ்சலி,
வியாக்கிரபாதர். மிடற்றோன் முன்னோர் நாளில் கலங்கவும், பெருக்கவும், உரப்பவும்,
தாக்கவும், இரட்டவும், ஒலிப்பவும், கறங்கவும், தாக்கவும் முனிவர்க்காக ஆடிய பெருமான்
என இயைத்துக்கொள்க.
30-32:
திருவடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தோழி
(இ-ள்) திரு அடி வினவா
கரு உறை மாக்கள் நெஞ்சினும்-திருவடிகளை நினையாமல் எய்திய பிறப்பினையுடைய மாக்களுடைய
நெஞ்சத்துள் உஐயும் இருளைக்காட்டினும்; கடந்து நீண்ட வால் இரவில்-பெரிதும் இருண்டு
நீண்ட வலிய இரவின்கண்; நில்லாது செல்லவும் உரியம்-முறைமையன்றாயினும் ஈண்டுத் தங்கி
இராமல் யாமே நம் பெருமான் இருக்குமிடத்திற்குப் போதற்கும் உரியேம். தோழி-தோழீ
கேள் என்க.
(வி-ம்.) திருவடி நினையா
என்றும் பாடம். கரு: ஆகுபெயர். பிறப்பென்க. நெஞ்சும் அது-நெஞ்சினிடத்தில் இருள்
என்க.
33:
எம்......................................எதிர்ப்பட்டு
(இ-ள்) நம் பெருமான்;
எம் எதிர்ப்பு இன்றி-ஈண்டு வந்து எம்மை எதிர்த்தல் அன்றி; இருந்து எதிர்ப்பட்டு-நாம்
சென்று காண அவர் மனையிலேயே இருந்து நம்மால் எதிர்ப்பட்டுழி என்க.
(வி-ம்.) எம் எதிர்ப்பின்றி
என்றது தாமே வந்து நம்மை எதிர்த்தலே நேர்மையாகவும் அங்ஙனம் செய்யாமல் என்றவாறு.
இருந்தெதிர்ப்படுதலாவது, நாம் அவர்பால் செல்லுங்கால் அவர் மனையில் அவர் இருந்து
நம்மால் காணப்பட்டு என்றவாறு.
34-8:
மறை...................................பெறினே
(இ-ள்) மறைவழி ஒழுகா
மன்னவன் வாழும்-மெய்நூல் விதித்த நெறியில் நின்று ஒழுகாத கொடுங்கோல் மன்னவன்
வாழாநின்ற; பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல-பழியையுடைய நாட்டின்கண், நிரம்பிய
பாவத்தைப் போல; சேரமறைத்த கூர் இருள் நடு நாள்-உலகத்துப் பொருள்களை யெல்லாம்
ஒரு சேர மரைத்த மிக்க இருளையுடைய இவ்விடையாமத்திலே; அரிதிற் போந்தனிர் என்று-மிகவும்
அருமை
|