விடுமாபோல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ; அருள் மிக வுடைமையின் 1அருட்டுறை வந்து - தனக்கு அருளே மிகுத்த செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கைகண்டுகொள் ளெனக் கடலுலகறிய மெய் கண்டதேவன் எனப் பெயர் விரீஇ - நீ எல்லாப் பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான்பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வ மென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி - தனக்குள்ளே என்னையடக்கித் தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும் என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந் தந்து என்னுண்மையுந் தன்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என் செயலின்மையும் எம்மான் காட்டி - தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக் கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண் கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது; எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே - எனக்கு ஏறப் பொருந்து கையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம். இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது. 18 தருமா தருமத் தலைநின்றாழ் வேனைக் கருமா கடல்விடமுண் கண்டப் - பெருமான் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான் உருவென்ன வந்தெடுத்தா னுற்று. 19 | (உரை) தரும அதருமத் தலைநின்று ஆழ்வேனைக் கருமா கடல் விட முண் கண்டப் பெருமான் திருவெண்ணெய்நல்லூர்ச் சுவேத
1. அருட்டுறை : திருவெண்ணெய் நல்லூரிலுள்ள சிவாலயம்; 'பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா' என்பது சுந்தரர் தேவாரம். |