சிவமயம் திருச்சிற்றம்பலம் திருவதிகை - மனவாசகங்கடந்தார் அருளிச்செய்த உண்மை விளக்கம் மூலமும் உரையும்1 ----- காப்பு உண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப் பந்தமறப் புந்தியுள்வைப் பாம். | (உரை) வண்மை.......உரை செய்ய - வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற் பொருட்டும், - பந்தம் அற - பாசங்கள் நீங்குதற்பொருட்டும், - திண்மதம்... ஐங்கரனை - செக்கர்வானம்போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, - புந்தியுள் வைப்பாம் - சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம். நூல் பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா | 1. குறிப்பு :- இந்நூலாசிரியர் மெய்கண்டதேவருடைய மாணாக்கருள் ஒருவர். இவரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கிடைத்தில. இந்நூலுக்கு இப்பதவுரையும் வேறொரு பொழிப்புரையும் உண்டு. உரையாசிரியர்கள் பெயர் பிரதிகளில் துலங்கவில்லை. |