ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக்கேள் ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம் சத்தாதி யைஅறியும் தானம் செவிதோல்கண் அத்தாலு மூக்கென் றறி. 11 | (உரை) ஞானேந்திரியங்கள் நன்றா உரைக்கக்கேள் - ஞானேந்திரி யங்களை நன்றாகச் சொல்லுகிறோங் கேள், - ஊனம் உற்று மிகு பூதம் இடமா - குறைவு பொருந்தி மிகுகின்ற பஞ்சபூதங்களிடமாக நின்று, - ஈனமாஞ் சத்தாதியை அறியும் - அவை தாழ்வாகிய சத்தாதி விடயங்களை அறியும், - தானம் செவி தோல் கண் அத்தாலு மூக்கென்று அறி - அவற்றிற்குத் தானம் சுரோத்திரம் துவக்கு சட்சு அந்தச் சிகுவை ஆக்கிராணமென்று அறிவாய். 11 வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதனை ஈனமிகுந் தோல்கால் இடமாக - ஊனப் பரிசம் தனைஅறியும் பார்வையிற்கண் அங்கி விரவிஉரு வங்காணு மே 12 | (உரை) வானிடமா நின்று செவி மன்னும் ஒலியதனை அறியும் - ஆகாயத்தினிடமாக நின்று சுரோத்திரம் பொருந்திய சத்தத்தை யறியும், - கால் இடமாக நின்று ஈனமிகுந் தோல் ஊனப் பரிசம் தனை அறியும் - வாயுவினிடமாக நின்று ஈனத்துவமிக்க தொக்கு குறைவுடைய பரிசத்தை யறியும், - அங்கி விரவிப் பார்வையிற் கண் உருவங் காணுமே - தேயுவினிடமாக நின்று பார்வையினையுடைய சட்சு உருவத்தை யறியும். 12 நன்றாக நீரிடமா நாஇரதந் தான்அறியும் பொன்றா மணம்மூக்குப் பூவிடமா - நின்றறியும் என்றோது மன்றே இறைஆ கமம்இதனை வென்றார்சென் றாரின்ப வீடு. 13 | (உரை) நன்றாக நீரிடமா (நின்று) நா இரதந்தான் அறியும் - நன்மையாக அப்புவினிடமாக நின்று சிகுவை இரசத்தையறியும், - பொன்றாப் பூவிடமா நின்று மூக்கு மணம் அறியும் - கெடாத பிருதிவியினிடமாகநின்று ஆக்கிராணங் கந்தத்தை யறியும், - என்று |