இறை ஆகமம் அன்றே ஓதும் - என்று சிவாகமங்களிலே அநாதியே சொல்லும், - இதனை வென்றார் இன்ப வீடு சென்றார் - இந்தப் பஞ்சேந்திரியங்களை நிக்கிரகம் பண்ணினவர்களே ஆனந்த வீட்டினை அடைந்தார். 13 கண்ணுதல்நூ லோதியிடும் கன்மேந் திரியங்கள் எண்ணும்வச னாதிக் கிடமாக - நண்ணியிடும் வாக்குப்பா தம்பாணி மன்னு குதம்உபத்த மாக்கருது நாளு மது. 14 | (உரை) வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக் கருதும் கன்மேந்திரியங்கள் - வாக்குப் பாதம் பாணி பொருந்திய பாயு உபத்தமாகக் கருதுகின்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், - எண்ணும் வசனாதிக்கு இடமாக நாளுமது நண்ணியிடும் - மதிக்கின்ற வசனமும் கமனமும் தானமும் விசர்க்கமும் ஆனந்தமுமாகி யவற்றிற்கு இடமாக நாடோறும் பொருந்தும் என்று, - கண்ணுதல் நூல் ஓதியிடும் - சிவாகமம் செப்பும். 14 வாக்காகா யம்இடமா வந்துவச னிக்குங்கால் போக்காரும் காற்றிடமாப் புல்கிஅனல் - ஏற்கும் இடுங்கை குதநீ ரிடமா மலாதி விடும்பா ரிடம்உபத்தம் விந்து. 15 | (உரை) ஆகாயம் இடமா வாக்கு வந்து வசனிக்கும் - ஆகாய மிடமாக நின்று வாக்குப்பொருந்தி வார்த்தை சொல்லும், - காற்று இடமாகக் கால் போக்கு ஆரும் - வாயுவினிடமாக நின்று பாதம் கமனஞ் செய்யும், - அனல் புல்கி கை இடும் ஏற்கும் - தேயுவினிடமாக நின்று பாணி இடுதல் ஏற்றல் செய்யும், - நீரிடமாக்குதம் மலாதி விடும் - அப்புவினிடமாக நின்று பாயு மலசலங்களைப் பிரித்தல் செய்யும், - பாரிடம் உபத்தம் விந்து விடும் - பிருதிவியினிடமாக நின்று உபத்தம் விந்துவை விடுத்து ஆனந்தஞ் செய்விக்கும். 15 அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள் அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்தையிவை பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங் குற்றதுசிந் திக்கும் உணர். 16 | |