பக்கம் எண் :

642சித்தாந்த சாத்திரம்

     (உரை) எல்லை பலம் புதுமை - காலதத்துவமானது கழிகாலத்
தெல்லையையும் நிகழ்காலத்துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும்
பொருத்துவிக்கும், - எப்போதும் நிச்சயித்தல் - நியதி தத்துவமானது
எந்தக்காலமும் கன்மத்தை இவ்வளவென்று நிச்சயம் பண்ணி நிறுத்தும், -
அல்லல் தருங் கிரியை - கலையானது ஆணவத்தைச் சிறிது நீக்கி
ஆன்மாவுக்குக் கிரியையை யெழுப்பும், - ஆன்மாவுக்கு ஒல்லை -வித்தியா
தத்துவமானது ஆன்மாவுக்குச் சீக்கிரத்திலே அறிவை யெழுப்பும், - ஆசை -
இராகதத்துவமானது பெற்ற பதார்த்தங்களைச் சிறிதாக்கிப் பெறாததிலே
இச்சையை யுண்டாக்கும், - ஐம்புலனும் ஆரவருங் காலம் - ஆன்மா
பஞ்சேந்திரியங்களிடமாகச் சத்தாதிவிடயங்களைப் புசிக்க வருகின்ற
அவதரத்தில் புருடதத்துவமானது விடயத்திலே யழுத்துவிக்கும், - குறியா
மயக்கென்று கொள் - மாயையானது ஒன்றை நினைக்கவொட்டாமல்
மயக்கத்தைச் செய்யுமென்றறிவாயாக.                             19

வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நற்
சத்திசிவங் காண்அவைகள் தாம்.            20

     (உரை) வித்தியா ... கேள் - வித்தியா தத்துவங்கள் ஏழுஞ்
சொன்னோம், சுத்தமாயிருக்கிற சிவதத்துவங்கள் ஐந்தையுஞ் சொல்லுகிறோங்
கேள், - நித்தமாம் ... தாம் - அவை நித்தியமாயிருக்கிற சுத்த வித்தை ஈசுரம்
பின்கூறும் சாதாக்கியம் நன்மையாகிய சத்தி சிவம் என்றறிவாயாக.      20

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் - ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்.                     21

     (உரை) சுத்தவித்தை ... ஆக்கியிடும் - சுத்தவித்தை ஞானமேறிக்
கிரியை குறைந்திருக்கும், பழமையாகிய ஈசுவரதத்துவமானது சிவஞானங்
குறைந்து கிரியையேறியிருக்கும், - சாதாக்கியம்