இவை ஒத்தல் - சாதாக்கிய தத்துவம் ஞானமுங் கிரியையும் ஒத்திருக்கும், - என்றும் சத்தி கிரியை சிவம் ஆதார ஞான உருவாம் - எப்போதும் சத்தி தத்துவம் கிரியையாயிருக்கும், சிவதத்துவம் ஆதார ஞானமாயிருக்கும். 21 ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம் குறியா வினையென்று கொள். 22 | (உரை) ஆறாறு தத்துவமும் அடைவாகச் சொன்னோம் - முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகச் சொன்னோம், - மாறா மலம் இரண்டும் சொல்ல வா - விட்டுநீங்காமலிருக்கின்ற ஆணவமலத்தையும் கன்ம -மலத்தையும் சொல்லுகிறோங்கேள், - கூறில் அறியாமை ஆணவம் - சொல்லுமிடத்து அறியாமையைப் பண்ணிக்கொண்டு நிற்பது ஆணவமலம், - சுகதுக்கங் குறியா நீயான வினையென்று கொள் - சுகதுக்கமொன்றையும் நினையாமல் நீ தானாயிருப்பது தானே கன்ம மலமென்றறிவாயாக. 22 ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் மாறா அருளால் வகுத்துரைத்தீர் - வேறாகா என்னை எனக்கறியக் காட்டீர் இவைகண்டேன் உன்னரிய தேசிகரே உற்று. 23 | (உரை) உன்னரிய தேசிகரே - நினைத்தற்கரிய ஆசாரியரே, - ஆறாறு தத்துவமும் - முப்பத்தாறு தத்துவத்தையும், - ஆணவமும் - ஆணவ -மலத்தையும், - வல்வினையும் - வலிய கன்மமலத்தையும், - மாறா அருளால் வகுத்து உரைத்தீர் - விட்டு நீங்காத கிருபையினாலே வகுத்தருளிச்செய்தீர், - இவை கண்டேன் - இம்மலங்களைத் தரிசித்தேன், - வேறாகா என்னை எனக்கு அறியக் காட்டீர் [உற்று] - (இனி) இந்த மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கின்ற என்னுடைய சொரூபத்தையும் [பொருந்தி] அருளிச் செய்யவேண்டும். 23 நன்றா உரைக்கக்கேள் நல்லசித்தின் முன்அசித்திங்(கு) ஒன்றாது சித்தசித்தை ஓராது - நின்றிவற்றை | |