பக்கம் எண் :

644சித்தாந்த சாத்திரம்

அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை
குன்றாமல் ஓதுங் குறித்து.          24

     (உரை) நன்றா உரைக்கக் கேள் - நீ கேட்ட ஆன்மதரிசனத்தை
நன்றாகச் சொல்லுகிறோங்கேள் ;- நல்ல சித்தின் முன் அசித்து இங்கு
ஒன்றாது - நல்லசித்தாகிய சிவத்தின்முன்னே அசித்தாகிய பாசம் நில்லாது,
- சித்து அசித்தை ஓராது - சித்தாகிய சிவத்துக்கு அசித்தாகிய பாசத்தை
அறியவேண்டுவதில்லை, - இவற்றை அன்றே நின்று பகுத்தறிவது ஆன்மாவே
- சித்தாகிய சிவத்தையும் அசித்தாகிய பாசத்தையும் அநாதியிலே பொருந்தி
விசாரித்தறிவது ஆன்மாவே, என்று மறை குன்றாமல் குறித்து ஓதும் - என்று
சிவாகமங்களிலே குன்றாது சுட்டிச் சொல்லும்.                      24

தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்றறியா
எத்தன்மை என்னில் இயம்பக்கேள் - சுத்தமாம்
ஆறு சுவையும் அறியாது தன்னைத்தான்
கூறில் அவைஇவைபோற் கொள்.          25

     (உரை) தத்துவங்கள் ... கேள் - முப்பத்தாறு தத்துவங்களும்
ஜடமாகையினாலே தம்முடைய சொரூபத்தைத் தாமறியா, எந்த முறைமை
யென்று கேட்கிறாயானால் சொல்லுகிறோங்கேள், - சுத்தமாம் ... கொள் -
சுத்தமாயிருக்கிற அறுவகைச்சுவையுந் தன்னுடைய சொரூபத்தைத் தானறியாது,
சொல்லுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களுஞ் சுவைகளைப்போலத் தம்முடைய
சொரூபத்தைத் தாமறியா.                                        25

ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை
வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும்
ஒன்றொன்றா நாடிஉணர்ந் தோதில்அதில் உற்றறிவாய்
நின்றபொருள் தானேகாண் நீ.                 26

     (உரை) ஆறு சுவையும் ... மேன்மைபோல் - அறுவகைச் சுவையும்
புசித்துக் கைக்கிறது கார்க்கிறது கூர்க்கிறது துவர்க்கிறது புளிக்கிறது
இனிக்கிறதெனக் கண்டுணர்ந்து ஒருவன் சொல்லுகிற முறைமைபோல, -
ஆறாறும் ஒன்றொன்றா நாடி உணர்ந்து - முப்பத்தாறு