தத்துவங்களையும் ஒன்றொன்றாக விசாரித்தறிந்து, - ஓதில் - சொல்லுமிடத்து, - அதில் உற்று அறிவாய் நின்ற பொருள்தானே காண் நீ - அம்முப்பத்தாறு தத்துவங்களிலும் பொருந்தி அறிந்து வருகிற அறிவுகாண் நீயாகிய ஆன்மா. 26 குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு பொன்றாத நும்முருவம் போதியீர் - நின்றருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனதறிவின் நண்ணிஅறி வித்திடுவோம் நாம். 27 | (உரை) குன்றா அருளாலே ... போதியீர் - கெடாத கிருபையினாலே அடியேனுடைய சொரூபத்தை அருளிச் செய்தீர், கெடாத தேவரீருடைய சொரூபத்தையும் அடியேனுக்கு அருளிச்செய்ய வேண்டும், - நின்று ...போலே - ஆதித்தப் பிரகாசமானது கண்ணுக்குப் பதார்த்தங்களைக் காட்டிக்கொண்டு நிற்பதுபோல, - நாம் உனது அறிவின் நண்ணி அறிவித்திடுவோம் - நாம் உனதறிவிலே பொருந்தி நின்று அறிவித்து வருவோம். 27 அன்றியுங்கேள் ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவையென்ன - நின்றதுபோல் ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன்னறிவில் மேவாமல் மேவிநா மே. 28 | (உரை) அன்றியுங் கேள் - அல்லாமலுஞ் சொல்லுகிறோங் கேள், - ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவையென்ன - ஆன்மாவினாலே நன்றாக அறிந்து காரியப்பட்டு வருகிற பஞ்சேந்திரி -யங்களும் ஆன்மாவினாலேயறிந்து காரியப்பட்டு வருகிறோமென்றறியா, - நின்றது போல் - அங்ஙனம் நின்ற பஞ்சேந்திரியங்கள்போல், - நாமே உன்னறிவில் மேவாமல் மேவி - நாம் உன்னறிவிலே பொருந்தாமற் பொருந்தி நின்று, - ஓவாமல் உன்னை உணர்த்துவோம் - விட்டு நீங்காமல் உனக்கறிவிப்போம் (அதனை நீ அறியாய்). 28 அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல் மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும் | |