பக்கம் எண் :

சீறாப்புராணம்

476


முதற்பாகம்
 

1240. பொன்ன கத்தினுந் தீவினும் பூவினும் பொருவா

     மின்னி லங்கிய மக்கமா நகரினில் வியப்பா

     மன்னர் மன்னவர் மதித்திடச் சிறந்தககு பாவை

     முன்னி ருந்ததின் மும்மடங் கெனும்படி முடித்தார்.

25

      (இ-ள்) அவ்விதம் நிறுத்தி சொர்க்கலோகத்திலும் தீவுகளிலும் பூலோகத்திலும் ஒப்பாகாத பிரகாசமானது இலங்கப் பெற்ற திருமக்கமாநகரத்தில் ஆச்சரியமாய் இராஜாதி இராஜர்களும் மதிக்கும் வண்ணம் சிறப்புற்ற அந்தக் கஃபத்துல்லாவை முன்னரிருந்ததிலும் மூன்று பங்கு அதிகமென்று சொல்லும்படி செய்து முடித்தார்கள்.