9 |
வெவ்வினைவி
ளைத்தடுமிவ் வாழ்வுவிட மென்னா
மைவ்வினைம றுப்பவிவண் வந்துதுயர் வேண்டின்
மொய்வ்வினைமு திர்ந்தமுழு தென்மிடிமை யல்லா
லெவ்வினைதொ லைக்கடைதல் வேண்டுமினி யையா. |
|
"வெவ் வினை
விளைத்து அடும் இவ் வாழ்வு விடம் என்னா,
மை வினை மறுப்ப இவண் வந்து, துயர் வேண்டின்,
மொய் வினை முதிர்ந்த முழுது என் மிடிமை அல்லால்,
எவ்வினை தொலைக்கு அடைதல் வேண்டும், இனி, ஐயா! |
"ஐயா,
தீவினையை விளைவித்துக்கொல்லும் இம்மனித வாழ்வு
நஞ்சுற்றதென்று கண்டு, பாவ வினைகளை மறுத்து ஒழிக்கவென்று இங்கு
வந்து பிறந்து, அதற்குக் கருவியாகத் துன்பத்தை நீ வேண்டுவாயெனில்,
மொய்த்த துன்பச்செயல்கள் முதிர்ந்த முழுமையான என் வறுமையும்
அல்லாமல், இனி, தொலைவில் சென்று வேறு எவ்வினையை அடைதல்
வேண்டும்?
10 |
விஞ்சியதி
றஞ்செறியு விஞ்சைமலி வல்லோய்
துஞ்சியநி லத்திலுயிர் தோன்றி வினைநீக்கி
யெஞ்சியந லந்தருவை யென்றறிவர் யாரே
யஞ்சியதோர் தன்மையிது வென்றறைவ
ரென்றான்.
|
|
"விஞ்சிய திறம்
செறியும் விஞ்சை மலி வல்லோய்,
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி, வினை நீக்கி,
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே?
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர்!"
என்றான்.
|
"எல்லாவற்றையும்
மிஞ்சிய வல்லமை செறிந்து அறிவும் நிறைந்த
நல்லவனே, பாவத்தால் செத்துக் கிடந்த இம் மண்ணுலகிற்கு உயிராக
வந்து பிறந்து, பாவ வினையைப் போக்கி, அளவில்லாத நலங்களை நீ
தருவாயென்று அறிந்து உன்னைப் போற்றுவார் யாரோ? இது நீ
அச்சத்திற்கு ஆளாகியதொரு தன்மை என்றே யாரும் இகழ்ந்து கூறுவர்!"
என்று சூசை முடித்தான்.
11 |
இற்றுறுமி
ருத்தியிலி யம்பினனி யம்பப்
பற்றுறுமு ணர்ந்தபல வும்பகர்த றேற்றா
முற்றுறும ரந்தையெனு நீத்தமுழு கிச்சொல்
லற்றுறும ழுந்தொழில லாலெவனு மாற்றான். |
|