பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், (அவரதுசிஷ்யரான) மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், (அவர்வளர்த்த திருமகளாரான) ஆண்டாள், தொண்ட ரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர். இவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் தவிர்ந்த மற்றைப்பதின்மரும் திருவேங்கடத்தைப் பாடினரென அறிக. "ஏழ்பாரும் வெல்லுங் கதிர்" என்பதற்கு - எல்லாவுலகங்களிலுஞ் சென்று பரவி இருளை வென்று அகற்றும் ஒளியையுடைய என்று உரைப்பினும் அமையும். ஏழ்பாரும் வெல்லும் - ஏழுஉலகங்களிலும் (எல்லாஇரத்தினங்களினும்) மேம்பட்ட என்றுமாம். தமிழ் சொல் - பாடல்களுக்குக் கருவியாகு பெயர். தாழ்வான, புல் - ஒருபொருட்பன்மொழி. ஏழ்பார் - கீழேழும் மேலேழும் ஆக ஈரேழுலக மென்க. செந் தமிழ் - சுத்தமான தமிழ். நூல் 1. | பொன்னு மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு | | மின்னு மணிமுடியாம் வேங்கடமே - மன்னும் | | பரமபத நாட்டினான் பையரவின் சூட்டிற் | | கிரமபத நாட்டினான் சேர்வு. | (இ - ள்.) பொன்னும், - மணியும் - நவரத்தினங்களும், பொலிந்து - (தன்மீது) விளங்கப்பெற்று, ஓங்கி - தான் உயர்ந்திருத்தலால், பார்மகட்கு மின்னும் மணி முடி ஆம் - பூமிப்பிராட்டிக்கு விளங்குகின்ற இரத்தினகிரீ டம்போலிருக்கிற, வேங்கடம் - திருவேங்கடமலையானது, - மன்னும் - நிலை பெற்ற, பரமபதம் நாட்டினான் - பரமபதமென்னுந் திருநாட்டையுடையவனும், பை அரவின் சூட்டில் - படத்தையுடைய (காளியனென்னும்) பாம்பினது முடியிலே, சிரம பதம் நாட்டினான் - ஆட்டப்பயிற்சியையுடைய திருவடிகளை நிறுத்தி நடனஞ்செய்தவனு மாகிய எம்பெருமான், சேர்வு - (திரு வுள்ளமுவந்து) சேர்ந்திருக்குமிடமாம்; (எ - று.) - ஆம் - உவமவுருபு. வேங்கடம் சேர்வு எனமுடிக்க; இம்முடிபு, இந்நூற்செய்யுளெல்லாவற் றுக்கும் ஒக்கும். ஏ - ஈற்றசை; பிரிநிலையாகக்கொள்ளின், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்வியதேசங்களினும் மிகவும் பாங்கான வாசஸ்தானமென்னுங் கருத்துஅமையும்; அங்ஙனம் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். முன்னிரண்டடி - வடிவுபற்றி வந்த உவமையணி. பரமபதம் என்றும் அழிவில்லாது நித்தியமாயிருத்தலால், அதற்கு, "மன்னும்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. பரம பதம் - சிறந்த ஸ்தாநம். பரமபத நாடு - பரமபதமாகியநாடு; இருபெயரொட்டு. வருந்துதலென்னும் பொருளைத் தருகின்ற ச்ரமம் என்னும் வடசொல்லின் திரிபாகிய சிரமம் என்பது - "சிலைக்குரு விறற்குருகுலகுமரருக்கு |